ETV Bharat / state

குடிநீர் கிணற்றில் இறந்து கிடந்த சிறுத்தை: வனத் துறை விசாரணை!

நீலகிரி: உதகை அருகே குடிநீர் கிணற்றில் இறந்துகிடந்த சிறுத்தையை மீட்ட வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author img

By

Published : Nov 16, 2020, 3:29 PM IST

கிணற்றில் இறந்துகிடந்த சிறுத்தை மீட்பு
கிணற்றில் இறந்துகிடந்த சிறுத்தை மீட்பு

நீலகிரி மாவட்டம் உதகை அருகேவுள்ள கட்டபெட்டு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அந்த வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கட்டபெட்டு அருகேவுள்ள மசக்கல் கிராமத்தில், ஊர்மக்கள் குடி நீருக்காக பயன்படுத்தி வரும் கிணற்றில் தண்னீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அந்த கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், கிணற்றுக்குள் ஏணி மூலம் இறங்கி, சிறுத்தையின் உடலை மீட்டு அங்கேயே உடற்கூராய்வு செய்தனர். உயிரிழந்தது ஆண் சிறுத்தை என்பதும், அதற்கு நான்கு வயது இருக்கும் என்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வனத் துறையினர், சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது யாரேனும் கொன்று கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு: இருவர் கைது

நீலகிரி மாவட்டம் உதகை அருகேவுள்ள கட்டபெட்டு வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அந்த வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கட்டபெட்டு அருகேவுள்ள மசக்கல் கிராமத்தில், ஊர்மக்கள் குடி நீருக்காக பயன்படுத்தி வரும் கிணற்றில் தண்னீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது, அந்த கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத் துறையினர், கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர், கிணற்றுக்குள் ஏணி மூலம் இறங்கி, சிறுத்தையின் உடலை மீட்டு அங்கேயே உடற்கூராய்வு செய்தனர். உயிரிழந்தது ஆண் சிறுத்தை என்பதும், அதற்கு நான்கு வயது இருக்கும் என்றும் வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வனத் துறையினர், சிறுத்தை கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது யாரேனும் கொன்று கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுருக்குக் கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு: இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.