ETV Bharat / state

ஊட்டியில் மண் சரிவு - வாகன ஓட்டிகள் அவதி!

author img

By

Published : Oct 17, 2019, 3:53 PM IST

நீலகிரி: ஊட்டி - மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டதால், ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.

Largest Soil Slope in Ooty, ஊட்டியில் கனமழையால் மண் சரிவு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்துவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக, மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன. நேற்று இரவு மஞ்சூர் சாலையில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Largest Soil Slope in Ooty, ஊட்டியில் கனமழையால் மண் சரிவு

இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகளை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டால் உடனே அப்புறப்படுத்த தயார் நிலையில் ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தற்போது பெய்துவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக, மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன. நேற்று இரவு மஞ்சூர் சாலையில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

Largest Soil Slope in Ooty, ஊட்டியில் கனமழையால் மண் சரிவு

இதையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலைகளை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டால் உடனே அப்புறப்படுத்த தயார் நிலையில் ஜேசிபி இயந்திரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: சென்னையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

Intro:OotyBody:உதகை 17-10-19

ஊட்டி - மஞ்சூர் சாலையில் மேரிலேண்ட் அருகே கனமழை காரணமாக அதிகாலையில் மிகப்பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 5 மணிநேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது...

வடகிழக்கு பருவமழை யானது தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இரவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வந்தது பகல் நேரங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும் வானிலையில் அவ்வப்போது பகல் நேரங்களிலும் மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உதகையில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் உள்ள குந்தா பாலம் அருகே கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலையில் விழுந்தன. இதையடுத்து நேற்று இரவு மஞ்சூர் சாலையில் உள்ள மேரிலேண்ட் பகுதியில் கனமழை காரணமாக மிகப்பெரிய அளவில் மண்சரிவு ஏற்பட்டது இதனால் மஞ்சூரில் இருந்து உதகை வரும் போக்குவரத்துகளும் உதகையிலிருந்து மஞ்சூர் செல்லும் போக்குவரத்து களும் செல்லமுடியாமல் போனது.
கனமழையால் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தற்போது சாலைகளை சரி செய்யும் பணியினை மாநில நெடுஞ்சாலைத்துறையினா ஜேசிபி மூலம் மண்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் மஞ்சூர் சாலையில் மண்சரிவு ஏற்பட்டால் சீர்செய்ய தயார் நிலையில் ஜேசிபி எந்திரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனConclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.