ETV Bharat / state

குன்னூரில் கரோனா காரணமாக மூடப்பட்ட வங்கி!

author img

By

Published : Apr 22, 2021, 12:15 PM IST

நீலகிரி : குன்னூரில் வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வங்கி மூடப்பட்டது.

kunnoor-bank-closed-for-corona
kunnoor-bank-closed-for-corona

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தினசரி பாதிப்பு 15 பேருக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 60க்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு திரும்பி வந்த பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வட மாநிலம் சென்று திரும்பியதும், வங்கியில் சில மணிநேரம் பணியாற்றியதால் வங்கி மூடப்பட்டது.

குன்னூர் நகராட்சி சுகாதார பிரிவினர் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் விவரங்கள் 3 நாள்களுக்குள் தெரிய வரும். இதனால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தினசரி பாதிப்பு 15 பேருக்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 60க்கும் மேல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு திரும்பி வந்த பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இவர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் வட மாநிலம் சென்று திரும்பியதும், வங்கியில் சில மணிநேரம் பணியாற்றியதால் வங்கி மூடப்பட்டது.

குன்னூர் நகராட்சி சுகாதார பிரிவினர் அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்தனர். மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனைக்கு மாதிரி சேகரிக்கப்பட்டது. இதன் விவரங்கள் 3 நாள்களுக்குள் தெரிய வரும். இதனால் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.