நீலகிரி மாவட்டம், குன்னூர் பர்லியார் பகுதி மித வெப்ப காலநிலை கொண்டுள்ளது. இங்கு கிராம்பு, மிளகு, ஜாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட மருத்துவக் குணம் கொண்டவை விளைவிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள கிராம்பு சாகுபடி நடைபெற்று வருகிறது.
இங்கிருந்து கிராம்பு கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மிக குறைந்த விலையில் விற்பனையான கிராம்பு, இந்த ஆண்டு கிலோ ரூ.650க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், கிராம்பு விளைச்சல் அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்