நீலகிரி மாவட்டம் குன்னூர் தூதூர்மட்டம் அரசினர் மாணவர் விடுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதி எதுவும் தற்போது வரை கிடைப்பதில்லை. மேலும் கழிவறை உறங்கும் அறை உள்ளிட்டவை சுகாதாரமில்லாமல் உள்ளது.
உணவு சுகாதாரம் இன்றி வழங்கப்படுவதாவும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், விடுதிப் பணியாளர், சமையலர், துப்புரவு பணியாளர் உள்ளிட்டோர் இல்லாமல் ஒருவர் மட்டுமே அனைத்து வேலைகளையும் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே விடுதியை ஆய்வு செய்து உரிய அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என மாவடட நிர்வாகத்தை மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'தலைவன் ஃபுல் பார்ம்ல இருக்கார்' - விழா மேடையில் ஆட்சியரை புகழ்ந்த மாணவர்