ETV Bharat / state

தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி!

நீலகிரி : குன்னூர் அருகே, தேன் கூண்டுகளை உடைத்து நாசம் செய்து அதில் இருந்த தேனை வனத்திலிருந்து வந்த கரடி குடித்துச் சென்றுள்ளது.

author img

By

Published : Sep 21, 2019, 8:19 AM IST

தேன் கூண்டுகளை உடைத்து தேனை ருசித்த கரடி


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதைச்சுற்றி அடர்ந்த வனப்பகுதி, தேயிலைத் தோட்டம் உள்ளது சமீப காலமாக இப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்றவைகள் பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக வளர்ப்பு கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்திவந்தனர்.

அப்பகுதியில் சின்னப்பன் என்பவர் சொந்தமாக தேன் கூண்டுகள் வைத்து தேன் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில், வனப்பகுதில் இருந்து வந்த கரடி ஒன்று, அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட தேன் கூண்டுகளை உடைத்து நாசம் செய்து அதில் இருந்த தேனை குடித்துவிட்டு சென்றுள்ளது. இதனை அறிந்த சின்னப்பனும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வனத்திலிருந்து வந்த கரடி தேனை குடித்துச் சென்றுள்ளது

மேலும், இதுகுறித்து வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், விரைவில் அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரடி தாக்கி ஒருவர் பலி; பாதுகாப்பு வேண்டி மக்கள் போராட்டம்!


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதைச்சுற்றி அடர்ந்த வனப்பகுதி, தேயிலைத் தோட்டம் உள்ளது சமீப காலமாக இப்பகுதியில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்றவைகள் பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கிறது. இதன் காரணமாக வளர்ப்பு கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்திவந்தனர்.

அப்பகுதியில் சின்னப்பன் என்பவர் சொந்தமாக தேன் கூண்டுகள் வைத்து தேன் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில், வனப்பகுதில் இருந்து வந்த கரடி ஒன்று, அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட தேன் கூண்டுகளை உடைத்து நாசம் செய்து அதில் இருந்த தேனை குடித்துவிட்டு சென்றுள்ளது. இதனை அறிந்த சின்னப்பனும், அப்பகுதி மக்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

வனத்திலிருந்து வந்த கரடி தேனை குடித்துச் சென்றுள்ளது

மேலும், இதுகுறித்து வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், விரைவில் அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கரடி தாக்கி ஒருவர் பலி; பாதுகாப்பு வேண்டி மக்கள் போராட்டம்!

Intro:நீலகிரி மாவட்டம் குன்னூர் அடிப்பகுதியில் தேன் கூடுகளை உடைத்து தேனைக் குடித்து சென்ற கடியால் பொதுமக்கள் அச்சம்


Body:நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அட்டடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இதைச் சுற்றி அடர்ந்த வனப்பகுதி தேயிலைத் தோட்டம் உள்ளது சமீப காலமாக இப்பகுதியில் சிறுத்தை காட்டெருமை கரடி போன்றவைகள் பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிக்கு வந்து செல்கிறது இதன்காரணமாக வளர்ப்பு கால்நடைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சின்னப்பன் என்பவரது சொந்தமான இடத்தில் தேன் கூண்டுகள் வளர்க்கப்பட்டு வந்தன இதில் வனத்திலிருந்து வந்த கரடி பத்திற்கும் மேற்பட்ட தேன்கூடுகளை உடைத்து சேதப்படுத்தியது தேன் பெட்டிகளில் இருந்த தேனையும் கரடி குடித்து சென்றுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் இதுகுறித்து வனத்துறையினர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் உடனடியாக அப்பகுதியில் கூண்டு வைத்து அச்சுறுத்திவரும் கரடியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் பேட்டி. சின்னப்பன் குன்னூர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.