ETV Bharat / state

3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளருக்கு 7 ஆண்டு சிறை!

author img

By

Published : Mar 15, 2023, 9:59 AM IST

வீட்டு வரி பெயர் மாற்றம் செய்ய மூவாயிரம் லஞ்சம் வாங்கிய உதகை நகராட்சி வருவாய் உதவியாளருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டை விதித்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

நீலகிரி: உதகை காந்தல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பாட்ஷா (வயது 55). இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வீட்டு வரியை பெயர் மாற்றம் செய்ய உதகை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நாட்களாக அவருக்கு பெயர் மாற்றம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மீண்டும் நகராட்சி அலுவலகம் சென்றபோது, அங்கு வருவாய் உதவியாளராக பணியாற்றிய பாக்யராஜ் என்பவர் மூவாயிரம் ரூபாய் 0லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தனி வீட்டு வரி ரசீது தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மும்தாஜ் பாட்ஷா இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 9.2.2009 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், ஆய்வாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 3 ஆயிரம் பணத்தை நகராட்சி அலுவலகத்தில் மும்தாஜ் பாட்ஷா, பாக்யராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாக்யராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் செய்வாய்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாக்யராஜுக்கு லஞ்ச பணம் கேட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும், லஞ்சப் பணம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும், என 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாக்யராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரேணுகா கார்த்திகேயன் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீலகிரியில் முள்ளம்பன்றி கடத்திய மூவர் கைது!

நீலகிரி: உதகை காந்தல் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் பாட்ஷா (வயது 55). இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வீட்டு வரியை பெயர் மாற்றம் செய்ய உதகை நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். ஆனால் நீண்ட நாட்களாக அவருக்கு பெயர் மாற்றம் செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மீண்டும் நகராட்சி அலுவலகம் சென்றபோது, அங்கு வருவாய் உதவியாளராக பணியாற்றிய பாக்யராஜ் என்பவர் மூவாயிரம் ரூபாய் 0லஞ்சம் கொடுத்தால் பெயர் மாற்றம் செய்து தனி வீட்டு வரி ரசீது தருவதாக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மும்தாஜ் பாட்ஷா இதுகுறித்து உதகை லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து 9.2.2009 அன்று லஞ்ச ஒழிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் பெரோஸ்கான், ஆய்வாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் 3 ஆயிரம் பணத்தை நகராட்சி அலுவலகத்தில் மும்தாஜ் பாட்ஷா, பாக்யராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாக்யராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, ரசாயனம் தடவிய பணத்தை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை உதகை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் செய்வாய்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பாக்யராஜுக்கு லஞ்ச பணம் கேட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் ஆயிரம் அபராதமும், லஞ்சப் பணம் பெற்ற வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும், என 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்கனவே சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த பாக்யராஜ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரேணுகா கார்த்திகேயன் ஆஜராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நீலகிரியில் முள்ளம்பன்றி கடத்திய மூவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.