ETV Bharat / state

'காதல் கணவன் எனக்கு வேணும்' - வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் !

author img

By

Published : Dec 19, 2019, 9:23 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் காதல் கணவனைத் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி இளம் பெண் ஒருவர், காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

lover
இளம்பெண்

ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே தனது சித்தி வீட்டில் தங்கி, அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கதிராமங்கலம் மாணிக்கநாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் செல்போனில் பேசத் தொடங்கி, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின், தூத்துக்குடியில் உள்ள அரசுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்த வெங்கடேஷ், தனது காதலி கனிமொழியையும் இதே மையத்தில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் காதலன் வற்புறுத்தலின் பேரில் அதே பயிற்சி மையத்தில் ரயில்வே துறை தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோயிலில் உறவினர்கள் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். பிறகு கர்ப்பம் தரித்த கனிமொழி, வெங்கடேஷின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து வெங்கடேஷுக்கு பெண் பார்க்கும் தகவல் கனிமொழிக்கு கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், வெங்கடேஷின் பெற்றோர்களைப் பார்த்து முறையிட்டுள்ளார். ஆனால், அப்போது வெங்டேஷின் உறவினர்கள் தாக்க வந்ததால், அங்கிருந்து புறப்பட்டு நேராக காவல் நிலையத்திற்குச் சென்று வெங்கடேஷ் மீது கனிமொழி புகார் அளித்துள்ளார். இருப்பினும் கனிமொழியால் வெங்கடேஷ் இல்லாமல் வாழ முடியவில்லை.

இதனையடுத்து, நேற்று வெங்கேடஷின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கனிமொழி, தனது காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என கத்தியுள்ளார்.

இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா, திருவிடைமருதூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை, வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவேன். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் காவலர்களிடம் கனிமொழி தெரிவித்தார்.

காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்

கனிமொழியின் பையைக் காவலர்கள் சோதனை செய்ததில், மாத்திரைகள், வங்கி சேமிப்புப் புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்களைக் கைப்பற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நீடித்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுணா கனிமொழியை தனியாக அழைத்துச் சென்று இதற்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விரைவில் இரு தரப்பினரையும் அழைத்து பேச முடிவெடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கனிமொழி தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!

ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரத்தைச் சேர்ந்தவர் கனிமொழி. இவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே தனது சித்தி வீட்டில் தங்கி, அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது கதிராமங்கலம் மாணிக்கநாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரிடம் செல்போனில் பேசத் தொடங்கி, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்பின், தூத்துக்குடியில் உள்ள அரசுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் காவல் உதவி ஆய்வாளர் தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்த வெங்கடேஷ், தனது காதலி கனிமொழியையும் இதே மையத்தில் சேருமாறு வற்புறுத்தியுள்ளார். பின்னர் காதலன் வற்புறுத்தலின் பேரில் அதே பயிற்சி மையத்தில் ரயில்வே துறை தேர்வு பயிற்சிக்குச் சேர்ந்துள்ளார்.

இதையடுத்து, தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோயிலில் உறவினர்கள் இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். பிறகு கர்ப்பம் தரித்த கனிமொழி, வெங்கடேஷின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து வெங்கடேஷுக்கு பெண் பார்க்கும் தகவல் கனிமொழிக்கு கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் பேரில், வெங்கடேஷின் பெற்றோர்களைப் பார்த்து முறையிட்டுள்ளார். ஆனால், அப்போது வெங்டேஷின் உறவினர்கள் தாக்க வந்ததால், அங்கிருந்து புறப்பட்டு நேராக காவல் நிலையத்திற்குச் சென்று வெங்கடேஷ் மீது கனிமொழி புகார் அளித்துள்ளார். இருப்பினும் கனிமொழியால் வெங்கடேஷ் இல்லாமல் வாழ முடியவில்லை.

இதனையடுத்து, நேற்று வெங்கேடஷின் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட கனிமொழி, தனது காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என கத்தியுள்ளார்.

இதனால், அப்பகுதியில் பொது மக்கள் கூட்டம் சேரத் தொடங்கியது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா, திருவிடைமருதூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் இளம்பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை, வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவேன். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் காவலர்களிடம் கனிமொழி தெரிவித்தார்.

காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண்

கனிமொழியின் பையைக் காவலர்கள் சோதனை செய்ததில், மாத்திரைகள், வங்கி சேமிப்புப் புத்தகம் உள்ளிட்ட சில ஆவணங்களைக் கைப்பற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டம் நீடித்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுணா கனிமொழியை தனியாக அழைத்துச் சென்று இதற்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், விரைவில் இரு தரப்பினரையும் அழைத்து பேச முடிவெடுக்கப்படும் என்று காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, கனிமொழி தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதையும் படிங்க: பணத்திற்காக குழந்தையை விற்றுவிட்டு விசாரணைக்கு வர மறுத்த தம்பதி: போலீஸ் வலைவீச்சு!

Intro:தஞ்சாவூர் டிச 18

காதல் கணவனை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி இளம் பெண் ஒருவர் காதல் கணவன் இல்ல வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Body:கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் காதல் கணவனை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதல் கணவன் இல்ல வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று இந்த இளம்பெண் சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு தர்ணா போராட்டத்தை கைவிட்டார். காதல் கணவனின் வற்புறுத்தலை ஏற்று கருவையும் கலைத்து தற்போது நிற்கதியாய் நிற்கும் இளம்பெண் குறித்த ஒரு செய்தி


தஞ்சாவூர் செய்தி
ராமநாதபுரம் மாவட்டம் தூவிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் கனிமொழி. (பெயரை போட்டுக்கொள்ளலாம் என இளம் பெண் அனுமதி) பி.காம். பட்டதாரியான இவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி அங்குள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது கதிராமங்கலம் மாணிக்க நாச்சியார் கோவில் தெருவைச் சேர்ந்த பி.காம். பட்டதாரியான வெங்கடேஷ் என்பவரிடம் செல்போன் மூலம் பேசி வந்ததாககவும், இரண்டரை ஆண்டுகளாக காதலித்து வந்தததாகவும் அப்பெண் கூறுகிறார்
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசுத் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து காவல் உதவி ஆய்வாளர் தேர்வு பயிற்சிக்கு சேர்ந்துள்ளார் வெங்கடேஷ்.
இதையடுத்து, கனிமொழியையும் தூக்குக்குடியில் தான் பயிற்சி பெறும் தேர்வு மையத்தில் சேருமாறும், அவரது வற்புறுத்தலின் பேரில் அதே பயிற்சி மையத்தில் ரயில்வே துறை தேர்வுக்கு சேர்ந்ததாகவும் கனிமொழி கூறியகிறார்,
நாளடைவில் நெருக்கம் அதிகரித்த பின்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் வைத்து தனக்கு அங்குள்ள அம்மன் கோவிலில் உறவினர்கள் இன்றி தாலி கட்டியதாகவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கனிமொழி தெரிவித்தார்.
இதனால் தான் கர்ப்பம் அடைந்தததாகவும், வெங்கடேஷின் வற்புறுத்தலின் பேரில் கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் கனி மொழி பேட்டியளித்துள்ளார்.
தன்னுடன் வெங்கடேஷ் காதல் ரசம் சொட்ட சொட்ட செல்போனில் பேசிய ஆடியோவையும் கனிமொழி நம்மிடம் அளித்துள்ளார்.
இந்நிலையில், வெங்கடேஷுக்கு பெண் பார்ப்பதை கேள்விப்பட்ட கனிமொழி, கடந்த சில வாரங்களுக்கு முன் கதிராமங்கலம் வந்து, வெங்கடேஷின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார்.
அப்போது வெங்டேஷின் உறவினர்கள் தன்னை தாக்க வந்தததால், திரும்ப சென்று விட்டதாக கூறிய கனிமொழி, ராமநாதபுரத்தில் மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி வெங்கடேஷ் மீது புகார் அளித்து அதற்கான காவல் நிலைய மனு ரசீதையும் காட்டினார்
இந்நிலையில் இன்று காலை வெங்கேடஷின் வீட்டிற்கு வந்த கனிமொழி, அவரது வீட்டு வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தனது காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என்று கூறினார்.
இதனால் பொதுமக்கள் கூடியதையடுத்து பரபரப்பு மேலும் தொற்றிக் கொண்டது.
தனியாக வந்த இளம் பெண் தர்ணாவில் ஈடுபட்டதையறிந்த பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் சுகுணா, திருவிடைமருதூர் வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் தனது காதல் கணவனை தன்னுடன் சேர்த்து வைக்கும் வரை வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவேன் என்றும் இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கனிமொழி கொண்டு வந்திருந்த பையை சோதனை செய்ததில் மாத்திரைகள், வங்கி பாஸ்புக் உள்ளிட்ட சில ஆவணங்களை காவல் ஆய்வாளர் சுகுணா கைப்பற்றினார்.
பேச்சுவார்த்தை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், காவல் ஆய்வாளர் சுகுணா கனிமொழியை தனியாக அழைத்துச் சென்று இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.
வரும் 3 ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்துப் பேச முடிவெடுக்கப்படும் என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தன்னிடம் கூறியதையடுத்து சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தனி ஆளாக கனிமொழி நின்று நடத்திய தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.