ETV Bharat / state

‘வரும் காலத்திற்கும் விநியோகிக்கும் வகையில் யூரியா கையிருப்புள்ளது’ - அமைச்சர் தகவல் - Thanjore District News

தஞ்சை: வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் டெல்டா பகுதிகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் கையிருப்பு உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைகண்ணு
author img

By

Published : Nov 10, 2019, 9:34 PM IST

சீனாவில் நடைபெற்ற சர்வதேச முப்படை வீரர்களுக்கான 7ஆவது தடகளப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராணுவ வீரர் ஆனந்தனுக்கு அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அடுத்து நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் ராணுவ வீரர் ஆனந்தன் தங்கப் பதக்கங்களைப் பெற தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும். அப்போது டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தஞ்சை வந்துள்ளதாகவும், எனவே டெல்டா மாவட்டங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு அறவே இல்லை எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் துரைகண்ணு பேட்டி

மேலும், வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் யூரியா உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகளுக்கு இழப்பு: பி.ஆர். பாண்டியன்

சீனாவில் நடைபெற்ற சர்வதேச முப்படை வீரர்களுக்கான 7ஆவது தடகளப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ராணுவ வீரர் ஆனந்தனுக்கு அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அடுத்து நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் ராணுவ வீரர் ஆனந்தன் தங்கப் பதக்கங்களைப் பெற தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும். அப்போது டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு யூரியா தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தஞ்சை வந்துள்ளதாகவும், எனவே டெல்டா மாவட்டங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு அறவே இல்லை எனவும் தெரிவித்தார்.

அமைச்சர் துரைகண்ணு பேட்டி

மேலும், வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் யூரியா உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யூரியா தட்டுப்பாட்டால் விவசாயிகளுக்கு இழப்பு: பி.ஆர். பாண்டியன்

Intro:தஞ்சாவூர் நவ 10


வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் டெல்டா பகுதிகளில் யூரியா உள்ளிட்ட உரங்கள் கையிருப்பு உள்ளதாக தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.Body:

தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீனாவில் நடைபெற்ற சர்வதேச முப்படை வீரர்களுக்கான 7 வது தடகள போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்ற கும்பகோணத்தைச் சேர்ந்த இடது காலை இழந்த ராணுவ வீரர் ஆனந்தனுக்கு அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, அடுத்து நடைபெற உள்ள பாராலிம்பிக் போட்டிகளில் ராணுவ வீரர் ஆனந்தன் தங்கப் பதக்கங்களை பெற தமிழக அரசு அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

டெல்டா பகுதிகளில் நெல் சாகுபடிக்கு யூரியா உரம் தட்டுப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 33 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா உரம் தஞ்சை வந்துள்ளதாகவும், எனவே டெல்டா மாவட்டங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் தட்டுப்பாடு அறவே இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், வருங்காலத்திலும் விநியோகிக்கும் வகையில் யூரியா உரங்கள் கையிருப்பு உள்ளதாகவும், அதனை விற்பதற்கு கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

பேட்டி- இரா-துரைக்கண்ணு- வேளாண்மைத் துறை அமைச்சர்Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.