ETV Bharat / state

தஞ்சையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூவர் மீது குண்டர் சட்டம்

author img

By

Published : Jul 28, 2020, 10:08 PM IST

தஞ்சாவூர்: மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று பேரை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Three persons involved in various cases in Thanjavur have been arrested under the Gundas Act
Three persons involved in various cases in Thanjavur have been arrested under the Gundas Act

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அண்ணா நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (35), கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவில் கம்மாள தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சாமிநாதன் (34), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (35) ஆகிய மூவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையிலும், தஞ்சாவூர் மாவட்ட சரகக் காவல் நிலைய ஆய்வாளர்கள் தாக்கல் செய்த இதர ஆவணங்களின் அடிப்படையிலும் ரமேஷ், சாமிநாதன், மாரியப்பன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியரும், மாவட்ட குற்றவியல் நடுவருமான கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் அண்ணா நகரைச் சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (35), கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோவில் கம்மாள தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சாமிநாதன் (34), அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (35) ஆகிய மூவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால், இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையிலும், தஞ்சாவூர் மாவட்ட சரகக் காவல் நிலைய ஆய்வாளர்கள் தாக்கல் செய்த இதர ஆவணங்களின் அடிப்படையிலும் ரமேஷ், சாமிநாதன், மாரியப்பன் ஆகிய மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியரும், மாவட்ட குற்றவியல் நடுவருமான கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.