ETV Bharat / state

அரசுப் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடத்துநர் மீது புகார் - conductor complained that he had sexually assaulted

சென்னை: கோயம்பேட்டிலிருந்து அரசுப் பேருந்தில் மன்னார்குடி சென்றபோது நடத்துநர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்
author img

By

Published : Oct 2, 2019, 3:14 PM IST

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (28). இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார். நேற்றிரவு இவர் கோயம்பேட்டிலிருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவுப் பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் தன்னை யாரோ தொடுவது போன்று உணர்ந்த தமிழ்ச்செல்வி, கண்விழித்து பார்த்தபோது, பின் இருக்கையில் பேருந்து நடத்துநர் அமர்ந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் நடத்துநரை தாக்கியுள்ளார்.

இன்று அதிகாலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் நடத்துநர் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதேபோன்று ராமநாதபுரத்திலும் ஓடும் பேருந்தில் பெண்களிடம் ராஜு தவறாக நடந்து கொண்டதால், பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (28). இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார். நேற்றிரவு இவர் கோயம்பேட்டிலிருந்து மன்னார்குடிக்கு அரசு விரைவுப் பேருந்தில் சென்றுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் தன்னை யாரோ தொடுவது போன்று உணர்ந்த தமிழ்ச்செல்வி, கண்விழித்து பார்த்தபோது, பின் இருக்கையில் பேருந்து நடத்துநர் அமர்ந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் நடத்துநரை தாக்கியுள்ளார்.

இன்று அதிகாலை கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வந்த அவர் நடத்துநர் ராஜுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதேபோன்று ராமநாதபுரத்திலும் ஓடும் பேருந்தில் பெண்களிடம் ராஜு தவறாக நடந்து கொண்டதால், பணியிடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:தஞ்சாவூர் ஆக 02

சென்னையிலிருந்து அரசுப் பேருந்தில் கும்பகோணம் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த இளம் பெண் நடத்துநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுBody:சென்னையிலிருந்து அரசுப் பேருந்தில் வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக அந்த இளம் பெண் நடத்துநர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. வயது (28) இவர் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் சேவகியாக உள்ளார்.

இவர் இரவு கோயம்பேட்டிலிருந்து கும்பகோணம் வழியாக மன்னார்குடி நோக்கிச் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் ( SETC ) பயணம் செய்துள்ளார். இந்நிலையில் நடு இரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வி தன்னை யரோ தொடுவது போல் உணர்ந்து திடீரென கண்விழித்துள்ளார்.

அப்போது நடத்துநர் ராஜு தனது பின் இருக்கையில் இருந்து தன்னை பாலியல் கொடுக்கும் வகையில் மார்பை பிடித்ததாகவும் இதனால் அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறங்கிய தமிழ்ச்செல்வி நடத்துநர் ராஜுவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால் ராஜு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கொடுத்துக் கொள் என்று அலட்சியமாக பதிலளித்துள்ளார். ( இந்த காட்சி செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது )

இதையடுத்து தமிழ்ச்செல்வி பாலியல் தொல்லை கொடுத்ததாக ராஜு மீது மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக முன் வந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று தமிழ்ச் செல்வி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஏற்கனவே ராமநாதபுரத்தில் இதே போன்று ஓடும் பேருந்தில் பெண்களிடம் ராஜு தவறாக நடந்து கொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரியிடம் கேட்ட போது ராஜு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.



பேட்டி- தமிழ்ச்செல்வி- புகார் அளித்த பெண்Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.