தமிழ்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பி வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 245 பேர் கரோனா தொற்று பாதிப்படைந்து சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், இன்று (ஆக.19) ஒரே நாளில் தஞ்சையில் 114 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 256 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.