ETV Bharat / state

தனியார் வங்கியில் 37 கள்ள நோட்டுகள் கண்டுபிடிப்பு - ரிசர்வ் வங்கி புகார்

author img

By

Published : Dec 31, 2019, 9:22 AM IST

தஞ்சாவூர்: கும்பகோணம், தஞ்சாவூரில் உள்ள மூன்று தனியார் வங்கிகளில் இருந்து 37 கள்ளநோட்டுகள் வந்துள்ளதாக குற்றவியல் பிரிவு காவல் துறையினரிடம் சென்னை ரிசர்வ் வங்கி புகார் அளித்தது.

fake money
fake money

சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சேனாதிபதி தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் மூன்று புகார் மனுக்களை அளித்தார். அதில், தஞ்சாவூரில் உள்ள இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜூன் மாதத்தில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் மூன்று கள்ள நோட்டுகள் இருந்தன.

இதைத் தொடர்ந்து, கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து வந்த ரொக்கப் பணத்தில் 28 கள்ள நோட்டுகள் இருந்தன. அதன்பின், ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் ஆறு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இவை 100, 500 ரூபாய் நோட்டுகள். இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தஞ்சை மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்து கள்ள நோட்டுகள் வங்கிக்கு எப்படி வந்தது? யார் மூலம் வந்தது? என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சேனாதிபதி தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் மூன்று புகார் மனுக்களை அளித்தார். அதில், தஞ்சாவூரில் உள்ள இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜூன் மாதத்தில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் மூன்று கள்ள நோட்டுகள் இருந்தன.

இதைத் தொடர்ந்து, கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து வந்த ரொக்கப் பணத்தில் 28 கள்ள நோட்டுகள் இருந்தன. அதன்பின், ஆகஸ்ட் மாதம் கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரொக்கப் பணத்தில் ஆறு கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.இவை 100, 500 ரூபாய் நோட்டுகள். இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், தஞ்சை மாவட்ட குற்றவியல் காவல் துறையினர் மூன்று வழக்குகள் பதிவு செய்து கள்ள நோட்டுகள் வங்கிக்கு எப்படி வந்தது? யார் மூலம் வந்தது? என சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

ரூ. 22 லட்சம் வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

Intro:தஞ்சாவூர் டிசம்பர் 30 தஞ்சை மாவட்டத்தில் 2019 ஆம் ஆண்டில் வங்கி பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருந்ததாக சென்னை ரிசர்வ் வங்கி மேலாளர் புகாரின்பேரில் மாவட்ட குற்றவியல் போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்


Body:தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு மட்டும் வாங்கிய பணத்தில் 37 கள்ள நோட்டுகள் இருந்துள்ளதாக மாவட்ட குற்றவியல் பிரிவு போலீசாரிடம் சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சேனாதிபதி தஞ்சை மாவட்ட குற்றவியல் பிரிவிற்கு மூன்று புகார் மனுக்களை அளித்துள்ளார் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது கடந்த ஜூன் மாதம் தஞ்சாவூரில் உள்ள இரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மற்றும் கும்பகோணத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட முதன்மை கிளையிலிருந்து 2019 ஜனவரி மாதத்தில் வரப்பெற்ற ரெக்க படத்தில் மூன்று கள்ள நோட்டுகள் இருந்துள்ளதாகவும் கும்பகோணம் தனியார் வங்கியில் இருந்து வந்த பணத்தில் 28 கள்ள நோட்டுகள் இருப்பதாகவும் அதன் பின் ஆகஸ்ட் மாதத்தில் கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியில் இருந்து வரப்பெற்ற நோக்கம் பணத்தில் 6 கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மேலும் கள்ள நோட்டுகள் 100 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் ஆகவும் இருக்கிறது என அவர் மனுவில் தெரிவித்திருந்தார் இப்புகாரின் பேரில் தஞ்சை மாவட்ட குற்றவியல் போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்து கள்ள நோட்டுகள் வங்கிக்கு எப்படி வந்தது யார் மூலம் வந்தது என சிசிடிவி காட்சிகளை கொண்டு பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்


Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.