ETV Bharat / state

'ஹெல்மெட் அணியாமல் மதுபோதையில் வந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்': நீதிமன்றம் அதிரடி! - thanjai traffic police fined 10,000 for not wearing helmet

தஞ்சை: சாலையில் தலைக்கவசம் அணியாமல் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞருக்கு, பத்தாயிரம் ரூபாய் அபராதத்தை நீதிமன்றம் அதிரடியாக விதித்தது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹெல்மெட்
author img

By

Published : Sep 20, 2019, 6:01 PM IST


தமிழ்நாடு அரசு, இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து வரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. மேலும் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டும் வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சையில் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரி வளாகம், பேருந்து நிலையங்கள், பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், அரவிந்த் (36) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மதுபோதையில் வாகனத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த அரவிந்திற்கு போக்குவரத்து காவல்துறையினரை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். இது அந்த மாவட்ட வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாடு அரசு, இருசக்கர வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து வரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. மேலும் இது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டும் வருகிறது. அதன் அடிப்படையில் தஞ்சையில் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரி வளாகம், பேருந்து நிலையங்கள், பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து காவல்துறையினர் நடத்திய தீவிர வாகன சோதனையில், அரவிந்த் (36) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் மதுபோதையில் வாகனத்தில் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்த காவலர்கள், அவர் மீது வழக்குப் பதிவுசெய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த அரவிந்திற்கு போக்குவரத்து காவல்துறையினரை ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி அதிரடியாக உத்தரவிட்டார். இது அந்த மாவட்ட வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

தலைக்கவசம் போட்டவர்களுக்கு இனிப்பு வழங்கிய போக்குவரத்துத் துறையினர்!

Intro:தஞ்சாவூர் செப் 19


மது போதையில் தலைக்கவசம் இல்லாமல் வந்த தஞ்சாவூர் வாலிபருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் முதன் முறையாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுBody:
தஞ்சையில் ஹெல்மெட் அணியாமலும், மது போதையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த வாலிபருக்கு போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் .
முதன் முறையாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தஞ்சை வாகன ஓட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு இருசக்கர வாகனம் ஓட்டுபவர் பின்னால் அமர்ந்திருப்ப வரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது.
தஞ்சையில் மாவட்டம் மூழுவதும் பள்ளி கல்லூரி வளாகம், பஸ் நிலையங்கள், பைபாஸ் சாலைகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில்
செய்து வரும் நிலையில்
தஞ்சை பழைய பஸ்நிலையம் பின்புறம் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த தஞ்சாவூர் சேவியர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (வயது 36) என்ற வாலிபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது வாகனத்தை பறிமுதல் செய்து தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை விசாரணை செய்த நீதிபதி மதுபோதையில் வாகனம் ஓட்டிவந்த அரவிந்திற்கு போக்குவரத்து போலீசார் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டார். இது
தஞ்சை வாகன ஓட்டிகள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது



Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.