ETV Bharat / state

தஞ்சையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

author img

By

Published : May 28, 2019, 11:41 PM IST

தஞ்சை: அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.

தஞ்சை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான கடல் பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றம் ஏற்பட்டது.

மேலும் திடீரென 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் தயாரான நாட்டுப்படகு வைத்திருந்த மீனவர்கள் அதை கண்ட அதிர்ச்சியில் மீன்பிடிக்க செல்லாமல் திரும்பியுள்ளனர். மீண்டும் மாலை 5 மணி அளவில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் புதுப்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான கடல் பகுதிகளில் இன்று காலை கடல் சீற்றம் ஏற்பட்டது.

மேலும் திடீரென 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. இதனால் மீன் பிடிக்கச் தயாரான நாட்டுப்படகு வைத்திருந்த மீனவர்கள் அதை கண்ட அதிர்ச்சியில் மீன்பிடிக்க செல்லாமல் திரும்பியுள்ளனர். மீண்டும் மாலை 5 மணி அளவில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் ஏற்பட்டது.

Intro:அதிரை பகுதியில் கடல் சீற்றம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியான அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கீழத்தோட்டம் புதுப்பட்டினம் மல்லிபட்டினம் சேதுபாவாசத்திரம் மற்றும் கட்டுமாவடி வரையிலான கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக கடலில் அதிவேக சூறை காற்று வீசி வருகிறது மேலும் அலைகள் 7 அடி உயரத்திற்கு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பி விட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை கடல் திடீரென 200 மீட்டர் தூரம் வரை உள்வாங்கியது. இதனால் காற்று குறைந்துள்ளது எனவே மீன் பிடிக்கச் செல்லலாம் என்று எண்ணிய மீனவர்கள் வந்து பார்த்த பொழுது கடல் உள்வாங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். வேறு எதுவும் கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்ற அச்சத்துடன் மீன்பிடிக்க செல்லாமல் திரும்பிவிட்டனர். இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் மீண்டும் காற்றின் வேகம் அதிகரித்து கடலில் சீற்றம் ஏற்பட்டது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.