கரானா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், ஒவ்வொருவரும் முகக் கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் என ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். மருத்துவமனைக்கு வந்துவிட்டு வெளியில் செல்பவர்கள் உடலில் இருக்கும் நோய்த் தொற்று கிருமிகளை அழிக்கும் வண்ணம், உடல் முழுவதும் கிருமி நாசினி படவேண்டும் என்ற நோக்கததில் மருத்துவமனை வெளிப்புற வாயிலில் கிருமி நாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியில் செல்பவர்கள் அனைவரையும் அந்த அரங்கம் வழியாக வெளியேறும் வகையில், அப்பகுதியில் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை மாநகரத்தில் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்பட நான்கு இடங்களில் கிருமிநாசினி தெளிப்பான் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க...மகாராஷ்டிராவிலிருந்து நடந்து வந்த தமிழ்நாடு இளைஞர் தெலங்கானாவில் மாரடைப்பால் மரணம்!