ETV Bharat / state

சிறப்பு ஊதியத்தொகை வழங்க வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

author img

By

Published : Mar 29, 2020, 7:02 AM IST

தஞ்சாவூர்: சிறப்பு ஊதியத் தொகையை ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என முகக்கவசம் அணிந்து தூய்மைப் பணியாளர்கள் சார் ஆட்சியரிடம் கோரிக்கைவைத்தனர்.

சிறப்பு ஊதியத் தொகை வழங்க வேண்டி துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை
சிறப்பு ஊதியத் தொகை வழங்க வேண்டி துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 117 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தற்பொழுது கரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிவரும் நிலையில் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் இரவு பகலாக பணியாற்றிவரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், அரசு நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் இரண்டு மாத சம்பளத்தை அறிவித்துள்ளார்.

சிறப்பு ஊதியத் தொகை வழங்க வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு எந்த ஊதியத்தையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து இந்த சிறப்புத் ஊதியத் தொகையை ஒப்பந்த சுய உதவிக் குழு தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கவேண்டுமென வலியுறுத்தி, அவர்கள் பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி விட்டு நடந்துசென்று சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 117 சுய உதவிக்குழு தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றிவருகின்றனர். தற்பொழுது கரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கிவரும் நிலையில் அனைத்து தூய்மைப் பணியாளர்களும் இரவு பகலாக பணியாற்றிவரும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர், அரசு நிரந்தர தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும் இரண்டு மாத சம்பளத்தை அறிவித்துள்ளார்.

சிறப்பு ஊதியத் தொகை வழங்க வேண்டி தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை

ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு எந்த ஊதியத்தையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து இந்த சிறப்புத் ஊதியத் தொகையை ஒப்பந்த சுய உதவிக் குழு தூய்மைப் பணியாளர்களுக்கும் வழங்கவேண்டுமென வலியுறுத்தி, அவர்கள் பாதுகாப்பு முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளி விட்டு நடந்துசென்று சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.