ETV Bharat / state

வீடுகளுக்குள் புகுந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதி!

தஞ்சாவூர்: மல்லிப்பட்டினம் கிராமத்தில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததால், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

author img

By

Published : Dec 8, 2019, 12:00 PM IST

வீட்டிற்குள் புகுந்த தண்ணீர்
கிராமத்தை சூழ்ந்த மழை நீர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது மல்லிப்பட்டினம் கிராமம். இந்த கிராமத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மல்லிப்பட்டினம் வடக்கு தெரு பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும், மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கிராமத்தைச் சூழ்ந்த மழை நீர்

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இந்த மல்லிப்பட்டினம் வடக்கு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் உள்ளூரில் உள்ள உறவினர் வீடுகள் அல்லது வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மூன்று நாட்களாக இப்பகுதியில் மழை பெய்யாத நிலையில், தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல், பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இது தவிர வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்காக வீடுகளுக்குள் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளப்பெருக்கால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது மல்லிப்பட்டினம் கிராமம். இந்த கிராமத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர்.

இந்நிலையில், மல்லிப்பட்டினம் வடக்கு தெரு பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்து விடுகிறது. இது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும், மழை தொடர்ந்து பெய்துவருவதால் வீடுகளுக்குள் மழை நீர் புகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

கிராமத்தைச் சூழ்ந்த மழை நீர்

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைவரிடமும் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் இந்த மல்லிப்பட்டினம் வடக்கு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் உள்ளூரில் உள்ள உறவினர் வீடுகள் அல்லது வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மூன்று நாட்களாக இப்பகுதியில் மழை பெய்யாத நிலையில், தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் இருந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல், பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகிறது. இது தவிர வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்காக வீடுகளுக்குள் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க: வெள்ளப்பெருக்கால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்.!

Intro:வடிகால் வசதிகள் இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் அவலம்- பத்தாண்டுகளாக அவதிப்படும் மக்கள்


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மல்லிப்பட்டினம் கிராமம் இந்த கிராமம் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இங்கு வாழும் மக்கள் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர் இந்நிலையில் மல்லிப்பட்டினம் வடக்கு தெருவைச் சேர்ந்த பகுதிகளில் முறையான வடிகால் வாய்க்காலில் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்து விடுகிறது இது கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மேலும் தொடர் மழை பெய்து வந்தால் வீடுகளுக்குள் மழை நீர் போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபற்றி பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அதிகாரிகள் இடத்திலும் இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்று இப்பகுதியில் வாழும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக தஞ்சை மாவட்ட கடலோரப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் இந்த மல்லிப்பட்டினம் வடக்கு பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் 15க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் உள்ளூரில் உள்ள உறவினர் வீடுகளுக்கோ அல்லது வெளியூரில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை கடந்த மூன்று நாட்களுக்கு இந்த பகுதியில் பெய்யாத நிலையில் தேங்கிய மழைநீர் இன்னும் வடியாமல் இருந்துவருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் பல தொற்று நோய்கள் ஏற்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தவிர வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்காக இந்த மக்கள் வீடுகளுக்குள் மோட்டாரை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். நேற்று தஞ்சை மாவட்ட கடற்கரை பகுதியில் காலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வந்தது இதனால் மீண்டும் மழைநீர் வீடுகளுக்குள் தேங்கியுள்ளது. இவ்வாறு பல ஆண்டுகளாக இடையூறுகளை அனுபவித்துவரும் இப்பகுதி மக்களின் கோரிக்கை நிறைவேற உடனடியாக இந்த பகுதியில் மழைநீர் வடிவதற்கு வடிகால் வசதி செய்து தரவேண்டும் என இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.