ETV Bharat / state

நவதானிய அலங்காரத்தில் தஞ்சை பெரிய கோயில் மஹா வாராஹி அம்மன்

author img

By

Published : Jun 25, 2023, 12:40 PM IST

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் நவதானிய அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

நவதானிய அலங்காரத்தில் தஞ்சை பெரிய கோயில் மஹா வாராஹி அம்மன்
நவதானிய அலங்காரத்தில் தஞ்சை பெரிய கோயில் மஹா வாராஹி அம்மன்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் நவதானிய அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்திபெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் தனி சந்நிதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் என்பதும், வேறு எங்கும் நடைபெறுவது இல்லை என்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா, தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மேலும், மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்துக் கொள்வர். அந்த வகையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்று, பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு முதல் நாள் இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லட்டு, குலோப் ஜாமுன், மைசூர் பாகு, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல், மூன்றாம் நாள் குங்குமம் அலங்காரம் நடைபெற்றது. மேலும், நான்காம் நாள் சந்தன காப்பு அலங்காரம், 5ஆம் நாள் தேங்காய்ப் பூ அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, ஆறாம் நாளாக மாதுளை முத்துக்களால் அலங்காரமும், அதனைத் தொடர்ந்து ஏழாவது நாளான நேற்று (ஜூன் 24) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவதானியத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் நேற்றைய கலை நிகழ்ச்சியாக பெங்களூரு ஸ்ரீ சீனிவாசன் ஆகியோரின் பஜன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா: மாதுளை முத்துக்கள் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் நவதானிய அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் கோயில் உலகப் பிரசித்திபெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலில் இருக்கும் தனி சந்நிதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், மஹா வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும் என்பதும், வேறு எங்கும் நடைபெறுவது இல்லை என்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்புகளில் ஒன்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ஆம் ஆண்டு பெருவிழா, தஞ்சை பெரிய கோயிலில் கடந்த ஜூன் 18ஆம் தேதி ஸ்ரீ மஹா கணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப் பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு அபிஷேகமும், பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.

மேலும், மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறும். இந்த ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்துக் கொள்வர். அந்த வகையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்று, பின்னர் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு முதல் நாள் இனிப்பு வகைகளான ஜாங்கிரி, லட்டு, குலோப் ஜாமுன், மைசூர் பாகு, பால்கோவா உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல், மூன்றாம் நாள் குங்குமம் அலங்காரம் நடைபெற்றது. மேலும், நான்காம் நாள் சந்தன காப்பு அலங்காரம், 5ஆம் நாள் தேங்காய்ப் பூ அலங்காரம் ஆகியவை செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து, ஆறாம் நாளாக மாதுளை முத்துக்களால் அலங்காரமும், அதனைத் தொடர்ந்து ஏழாவது நாளான நேற்று (ஜூன் 24) ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு நவதானியத்தால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மத்திய அரசின் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் நேற்றைய கலை நிகழ்ச்சியாக பெங்களூரு ஸ்ரீ சீனிவாசன் ஆகியோரின் பஜன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: தஞ்சை பெரிய கோயில் ஆஷாட நவராத்திரி விழா: மாதுளை முத்துக்கள் அலங்காரத்தில் மஹா வாராஹி அம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.