ETV Bharat / state

கொலையா? தற்கொலையா? கணவர் சாவில் மர்மம்!

author img

By

Published : Sep 14, 2019, 9:01 PM IST

தஞ்சாவூர் : பாபநாசத்தில், சகோதரருடன் ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாக கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து, அவரது மனைவி தன் கணவர் சாவில் மர்மம் உள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

கொலையா? தற்கொலையா?காவல் துறையினர் விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலசெம்மங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஒரு மகன்,மகளும் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரனுக்கும் அவரது சகோதரர் மகேந்திரனுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்னையின் காரணமாக தாய் சிவகாமி தூக்க மாத்திரை உட்கொண்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.ஆனால் கடந்த 12 ஆம் தேதி தாய் சிவகாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்பு, அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமானால் தனது சொத்தை பிரித்து தருமாறு கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மகேந்திரன் சொத்தைப் பிரிக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், காலை பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய கஜேந்திரன், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கஜேந்திரனுக்கும், சகோதரர் மகேந்திரனுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கஜேந்திரனின் மனைவி நந்தினி, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சொத்துக்காக கஜேந்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலசெம்மங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஒரு மகன்,மகளும் உள்ளனர். இந்நிலையில் கஜேந்திரனுக்கும் அவரது சகோதரர் மகேந்திரனுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்னையின் காரணமாக தாய் சிவகாமி தூக்க மாத்திரை உட்கொண்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.ஆனால் கடந்த 12 ஆம் தேதி தாய் சிவகாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்பு, அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமானால் தனது சொத்தை பிரித்து தருமாறு கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால், மகேந்திரன் சொத்தைப் பிரிக்க மறுத்துள்ளார்.

இந்நிலையில், காலை பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய கஜேந்திரன், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் கஜேந்திரனுக்கும், சகோதரர் மகேந்திரனுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தொடர்ந்து பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, கஜேந்திரனின் மனைவி நந்தினி, தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் சொத்துக்காக கஜேந்திரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:தஞ்சாவூர் செப் 14

பாபநாசத்தில் கார் ஓட்டுநர் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்Body:
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம் மேலசெம்மங்குடி பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன் இவருக்கு நந்தினி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர் இந்நிலையில் கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரன் ஏற்பட்ட சொத்து பிரச்சனை காரணமாக தாய் சிவகாமி தூக்க மாத்திரை உட்கொண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் கடந்த 12 ஆம் தேதி தாய் சிவகாமி தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய வேண்டுமானால் தனது சொத்தை பிரித்து தருமாறு கஜேந்திரன் தனது சகோதரர் மகேந்திரனிடம் வலியுறுத்தி உள்ளார் ஆனால் மகேந்திரன் சொத்தை பிரிக்க மறுத்துவிட்டார் இந்நிலையில் காலை பாபநாசம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கிய கஜேந்திரன் பாத்ரூமில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் தகவலறிந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் தன் சகோதரர் மகேந்திரன் ஏற்பட்ட சொத்து பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது தொடர்ந்து பாபநாசம் காவல் நிலைய ஆய்வாளர் நாகரத்தினம் விசாரணை நடத்தி வருகின்றனர். கஜேந்திரன் மனைவி நந்தினி தனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்துள்ளார் சொத்துக்காக கஜேந்திரன் கொலை செய்து உள்ளார் அல்லது தற்கொலை செய்து உள்ளார் என பல்வேறு கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகின்றனர்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.