ETV Bharat / state

நெல் கொள்முதலில் முறைகேடு; நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் காமராஜ்!

author img

By

Published : Jan 21, 2020, 10:23 PM IST

தஞ்சாவூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நெல் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ்
உணவுத் துறை அமைச்சர் காமராஜ்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகள்-அலுவலர்களுடனான, ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையிலும், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், “கடந்தாண்டு 1766 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 19 லட்சத்து 10 ஆயிரத்து 665 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலமாக 3 ஆயிரத்து 487 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்

இதனால் 5 லட்சத்து 6 ஆயிரத்து 821 விவசாயிகள் பயனடைந்தனர். ஊக்கத் தொகை மட்டும் 120 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 718 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

தற்போது 455 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக இதுவரை 87 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஊக்கத் தொகையாக 6 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய அமைச்சர்

மேலும், “தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடில் ஈடுபடும் ஊழியர்கள் , அலுவலர்கள் மீது புகார் வந்தால் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

2021ல் கிளைமாக்ஸ் நாங்கள்தான் என ஸ்டாலின் தெரிவித்தது குறித்து உணவுத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல கிளைமாக்ஸை நாங்கள் சந்தித்துவிட்டோம். கிளைமாக்ஸ் எப்போதும் நாங்கள்தான் அது எப்போதுமே எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: யானைகள் வரும் போகும்... - வனத்துறை அமைச்சர் அலட்சிய பதில்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகள்-அலுவலர்களுடனான, ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையிலும், அமைச்சர்கள் ஓ.எஸ். மணியன், துரைக்கண்ணு முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த உணவுத் துறை அமைச்சர் காமராஜ், “கடந்தாண்டு 1766 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 19 லட்சத்து 10 ஆயிரத்து 665 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலமாக 3 ஆயிரத்து 487 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ்

இதனால் 5 லட்சத்து 6 ஆயிரத்து 821 விவசாயிகள் பயனடைந்தனர். ஊக்கத் தொகை மட்டும் 120 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு 718 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

தற்போது 455 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக இதுவரை 87 ஆயிரத்து 493 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் ஊக்கத் தொகையாக 6 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும்” என்றார்.

நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய அமைச்சர்

மேலும், “தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்களை கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடில் ஈடுபடும் ஊழியர்கள் , அலுவலர்கள் மீது புகார் வந்தால் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.

2021ல் கிளைமாக்ஸ் நாங்கள்தான் என ஸ்டாலின் தெரிவித்தது குறித்து உணவுத் துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, பல கிளைமாக்ஸை நாங்கள் சந்தித்துவிட்டோம். கிளைமாக்ஸ் எப்போதும் நாங்கள்தான் அது எப்போதுமே எங்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்றார்.

இதையும் படிங்க: யானைகள் வரும் போகும்... - வனத்துறை அமைச்சர் அலட்சிய பதில்

Intro:தஞ்சாவூர் ஜன 21

நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சையில் நடைபெற்ற நெல் கொள்முதல் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்Body:

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை சார்பாக நெல் கொள்முதல் குறித்த விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் உடனான ஒருங்கிணைந்த கலந்தாய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் கைத்தறி துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தஞ்சாவூர் ,திருவாரூர் ,நாகப்பட்டினம், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் என கலந்துகொண்டனர் இந்த கூட்டத்திற்கு பிறகு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அளித்த பேட்டியில்.. கடந்த ஆண்டு 1766 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 19 லட்சத்து 10 ஆயிரத்தி 665 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மூலமாக 3487 கோடி ரூபாய் வழங்கப்பட்டது இதனால் 5 லட்சத்து 6 ஆயிரத்து821 விவசாயிகள் பயனடைந்துள்ளனர் ஊக்கத்தொகையாக மட்டும் 120 கோடி ரூபாயை தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது கடந்த எட்டு ஆண்டுகளில் தமிழக அரசு 718 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது எனவும் சித்தார் மேலும் தற்பொழுது 455 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக இதுவரை 87 ஆயிரத்தி 493 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது எனவும் ஊக்கத்தொகையாக 6 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார் மேலும் தேவைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது புகார் வந்தால் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்


பேட்டி

லட்சம் மெட்ரிக் டன் இந்த ஆண்டு நெல் கொள்முதல் செய்வதாக தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த பின்பு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பேட்டி



தஞ்சை அடுத்த மடிகை கிராமத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திடீரென ஆய்வு செய்தார் இந்த ஆய்வில் நெல் ஈரப்பதம் குறித்தும் நெல் மூட்டைகள் எடை அளவு குறித்து ஆய்வுகள் செய்து அதிகாரிகளிடம் விசாரணை செய்தார் நெல் கொள்முதல் செய்ய வரும் விவசாயிகளிடம் நேரிலே குறைகளை கேட்டறிந்தார் பின்பு விவசாயிகளிடம் எந்தவித சிரமங்கள் இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவுறுத்தினார் பின்பு அவர் அளித்த பேட்டியில் இந்த ஆண்டு 25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்வதாக தெரிவித்தார் பின்பு இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தார் பின்பு செய்தியாளர்கள் 

2021ல் கிளைமாக்ஸ் நாங்கள் தான் என ஸ்டாலின் தெரிவித்தது குறித்து உணவுத்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதிலில் பல கிளைமாக்ஸை நாங்கள் சந்தித்து விட்டோம், கிளைமாக்ஸ் எப்போதும் நாங்கள் தான் அது எப்போதுமே எங்களுக்குத் தான் சாதகமாக இருக்கும் இருக்கும் என தெரிவித்தார்.Conclusion:Sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.