ETV Bharat / state

தொடர் மழையால் மல்லிகை உற்பத்தி பாதிப்பு!

author img

By

Published : Nov 17, 2019, 1:00 PM IST

தஞ்சை: பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மல்லிகைப் பூ விவசாயிகள் கடும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

thanjavur

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியுள்ள தென்னை விவசாயிகள், புதிதாகத் தென்னங்கன்றுகளைப் பயிரிட்டு வளர்த்துவருகின்றனர். இந்த தென்னங்கன்றுகள் வளர்ந்து பலன் தர இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் வருமானம் ஈட்ட அப்பகுதி விவசாயிகள் மல்லிகைச் செடிகளை ஊடுபயிராகப் பயிரிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக மல்லிகைப் பூ விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் மல்லிகை வரத்து குறைந்து, ஒரு கிலோ 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தொடர் மழையால் மல்லிகை உற்பத்தி பாதிப்பு

இதேபோல சம்பங்கி பூவும் வரத்து குறைந்துள்ளது. இனிமேல் மழை குறைந்தாலும் பாதிக்கப்பட்ட செடிகள் மீண்டும் பழைய நிலைக்கு வர சில காலம் ஆகும் என்பதால் நெற்பயிருக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவது போல, மல்லிகைச் செடிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

கடந்த ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதியுள்ள தென்னை விவசாயிகள், புதிதாகத் தென்னங்கன்றுகளைப் பயிரிட்டு வளர்த்துவருகின்றனர். இந்த தென்னங்கன்றுகள் வளர்ந்து பலன் தர இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகும் என்பதால் வருமானம் ஈட்ட அப்பகுதி விவசாயிகள் மல்லிகைச் செடிகளை ஊடுபயிராகப் பயிரிட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக மல்லிகைப் பூ விவசாயிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். இதனால் மல்லிகை வரத்து குறைந்து, ஒரு கிலோ 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

தொடர் மழையால் மல்லிகை உற்பத்தி பாதிப்பு

இதேபோல சம்பங்கி பூவும் வரத்து குறைந்துள்ளது. இனிமேல் மழை குறைந்தாலும் பாதிக்கப்பட்ட செடிகள் மீண்டும் பழைய நிலைக்கு வர சில காலம் ஆகும் என்பதால் நெற்பயிருக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவது போல, மல்லிகைச் செடிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க: மதுரைப் பெண்களைக் காப்பாற்றிவிட்டு, உயிரிழந்த சென்னை சகோதரர்கள் - நெஞ்சை உருக்கும் சம்பவம்!

Intro:தொடர் மழை-மல்லிகை உற்பத்தி பாதிப்பு-விவசாயிகள் கவலை


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்மழை பெய்து வருகிறது .கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலில் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் .இந்த புயலால் தென்னை விவசாயிகள் கூடுதலாக பாதிக்கப்பட்டு தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். தென்னை மரங்கள் இப்பகுதியில் 90% அதாவது கிட்டத்தட்ட ஒரு கோடி மரங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக தென்னங்கன்றுகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர் .இந்த நிலையில் இனிமேல் இந்த தென்னங்கன்றுகள் வளர்ந்து பலன் தர இன்னும் ஐந்தாண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்பதால் தென்னை விவசாயிகள் அதாவது பேராவூரணி பட்டுக்கோட்டை ஊரணிபுரம் இடையாத்தி உள்ளிட்ட பகுதிகளில் அதுவரையில் வாழ்க்கையை ஓட்டுவதற்கு வருமானம் ஈட்ட தென்னை பயிர்களுக்கு ஊடாக மல்லிகை செடிகளை ஊடுபயிராக பயிரிட்டு வருகின்றனர் .இந்நிலையில் இந்த விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு மூன்று தினங்களில் ஐந்து கிலோ அல்லது ஆறு கிலோ வாவது மல்லிகைப்பூ கிடைத்துவிடுவதால் அவர்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் இருந்து வந்தது .இந்நிலையில் பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது .இந்த மழை நிலத்தடி நீர் பெருகுவதற்கும் மற்றும் ஏரி குளங்கள் நிரம்புவதற்கும் ,குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் நல்ல பலனாக இருந்தாலும் மல்லிகை பூ விவசாயிகளுக்கு இந்த மழை இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழையால் செடிகள் பாதிக்கப்பட்டு அதில் பூச்சிகளும் உற்பத்தியாகியுள்ளது இது மல்லிகை விவசாயிகளை கவலையடையச் செய்துள்ளது.மேலும் இதனால் மல்லிகை வரத்து குறைந்த நிலையில் ஒரு கிலோ 3,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு மல்லிகை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது உள்ளூர் மார்க்கெட்டுக்கு கூட மல்லிகைப்பூ வரத்து அறவே இல்லாமல் இருந்து வருகிறது. இதேபோல சம்பங்கி பூவும் வரத்து குறைந்துள்ளது. இனிமேல் மழை குறைந்தாலும் பாதிக்கப்பட்ட செடிகள் மீண்டும் பழைய நிலைக்கு வரவும் விளைச்சல் கிடைக்கவும் இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மல்லிகை விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக கூடுதல் செலவும் செய்ய வேண்டியுள்ளது .இந்த நிலையில் நெற்பயிருக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவது போல மல்லிகை செடிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மல்லிகை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். புயல் மழை என அடுத்தடுத்து பாதிப்புகளை இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சந்தித்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் கவலையுடன் உள்ளனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.