ETV Bharat / state

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு! - இலங்கை குண்டுவெடிப்பு

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் காவல்துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்
author img

By

Published : May 3, 2019, 6:35 PM IST

Updated : May 3, 2019, 11:22 PM IST

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், புராதான சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

மேலும், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளிநாட்டினர் உட்பட பலரும் வந்து செல்வதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வில் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகள் முறையாக உள்ளதா, காட்சிகள் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுகிறதா, எவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையில் தேவாலயம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், புராதான சின்னங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு

மேலும், தஞ்சை பெரிய கோவிலுக்கு வெளிநாட்டினர் உட்பட பலரும் வந்து செல்வதால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. இந்த ஆய்வில் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகள் முறையாக உள்ளதா, காட்சிகள் ஒழுங்காகப் பதிவு செய்யப்படுகிறதா, எவ்வளவு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, மெட்டல் டிடெக்டர்கள் சரியாக வேலை செய்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தஞ்சாவூர் மே 03


தஞ்சை பெரிய கோவிலின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்  திடீர்ஆய்வு.


கடந்த மாதம் இலங்கையில் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் பொருள் சேதமும் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பது பலப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் புராதான சின்னங்கள் மற்றும் பழமையான கோவில்களை பாதுகாக்கக்கூடிய பணியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக ஆயிரம் ஆண்டுகள் பழமையான உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு நாள்தோறும் வெளிநாடு வெளிமாநில வெளியூர் என ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் உள்ள மூன்று நுழைவு வாயில் கோபுரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன, எவ்வளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தஞ்சை பெரிய கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் எவ்வளவு பொருத்தப்பட்டுள்ளன அந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் முறையாக பதிவு செய்கின்றனவா என்பது குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு மேற்கொண்ட அவர்கள் பெரிய கோவில் ராஜராஜன் நுழைவாயிலில் உள்ள பாதுகாப்பு வளையத்தையும் மெட்டல் டிடெக்டர் போன்ற வற்றை தானே ஆய்வு செய்தார். மேலும் முறையாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் வரக்கூடிய பக்தர்களின் உறுதி செய்யும் வகையிலும் கோவிலின் பாதுகாப்பு உறுதி செய்யும் வகையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்த அவர் அங்கு இருந்த அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து விளக்கம் பெற்றுக்கொண்டார்.
Last Updated : May 3, 2019, 11:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.