ETV Bharat / state

மீண்டும் உயிர் பெறுமா உப்பளத்தொழில்?

author img

By

Published : Dec 16, 2019, 3:43 PM IST

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. ஆனால் கடலுக்குள்ளேயே திரவியம் தேடுபவர்கள் தான் மீனவர்களும் உப்பளத்தொழிலாளர்களும். தற்போது பல்வேறு காரணங்களால் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் உப்பளத்தொழிளார்கள் குறித்த சிறப்பு கட்டுரை...

மீண்டும் உயிர் பெறுமா  உப்பளத்தொழில்!
மீண்டும் உயிர் பெறுமா உப்பளத்தொழில்!

நூறாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக வேதாரண்யத்தில் விளையும் உப்பைப்போன்று அதிராம்பட்டினத்தில் விளையும் உப்பும் உணவு பயன்பாட்டிற்கு உகந்த உப்பு என்பதால் மற்ற பகுதிகளைவிட இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு வரவேற்பு இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் அமோகம்!

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது அதிராம்பட்டினத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்காகவே அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கினர். இதற்கென 1922 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பகுதியில் உப்புத்துறை அலுவலகம் கட்டப்பட்டு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் உப்பளத் தொழிலாளர்கள் தங்குவதற்கு என குடியிருப்புகளும் அமைத்துக் கொடுத்து உப்பளத் தொழிலை லாபகரமான தொழிலாக செய்துவந்தனர். கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் இணைந்து 5000 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நலிவடைந்த நிலையில் உப்பளத்தொழில்

நாளடைவில் நலிவு!

ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த இந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு அதாவது பாத்தி கட்டுதல், நீர் பாய்ச்சுதல், கால் மிதித்தல் போன்ற ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கஜா புயலால் கடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது. அப்போது கடல் எது? உப்பளம் எது? என்று தெரியாத அளவிற்கு உடைந்த படகுகள் உப்பளங்களில் மிதந்தன. இதனால் உப்பு உற்பத்திக்கு கடுமையாக செலவு செய்துவிட்டு உப்பளங்கள் இந்த நிலையில் இருப்பதை கண்ட உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.

அடுத்தடுத்த புயலால் சபிக்கப்பட்ட தொழிலாளர்கள்!

இதைத்தொடர்ந்து கடல்நீர் வடிந்தப் பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி செய்வதற்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டபோது அடுத்தடுத்த புயலின் தாக்குதலால் உப்பளங்கள் சேதம் அடைந்தன. அதை அடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததாலும் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பில்லாமல் போனது. இப்படி இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலை தேடிசெல்லும் நிலை வந்தது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது நலிவடைந்து போனது உப்பளத்தொழிலாளர்களுக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

உப்புத் தொழில் அழியும் அபாயம்

நூறாண்டுகளுக்கும் மேலாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்பகுதிகளான தம்பிக்கோட்டை, மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக நடைபெற்று வந்தது. குறிப்பாக வேதாரண்யத்தில் விளையும் உப்பைப்போன்று அதிராம்பட்டினத்தில் விளையும் உப்பும் உணவு பயன்பாட்டிற்கு உகந்த உப்பு என்பதால் மற்ற பகுதிகளைவிட இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு வரவேற்பு இருந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் மட்டும் அமோகம்!

ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின்போது அதிராம்பட்டினத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்காகவே அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தொடங்கினர். இதற்கென 1922 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பழஞ்செட்டித்தெரு பகுதியில் உப்புத்துறை அலுவலகம் கட்டப்பட்டு தனி அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். மேலும் உப்பளத் தொழிலாளர்கள் தங்குவதற்கு என குடியிருப்புகளும் அமைத்துக் கொடுத்து உப்பளத் தொழிலை லாபகரமான தொழிலாக செய்துவந்தனர். கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் இணைந்து 5000 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நலிவடைந்த நிலையில் உப்பளத்தொழில்

நாளடைவில் நலிவு!

ஒரு காலத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த இந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது பல்வேறு காரணங்களால் நலிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு அதாவது பாத்தி கட்டுதல், நீர் பாய்ச்சுதல், கால் மிதித்தல் போன்ற ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிய நிலையில் கஜா புயலால் கடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது. அப்போது கடல் எது? உப்பளம் எது? என்று தெரியாத அளவிற்கு உடைந்த படகுகள் உப்பளங்களில் மிதந்தன. இதனால் உப்பு உற்பத்திக்கு கடுமையாக செலவு செய்துவிட்டு உப்பளங்கள் இந்த நிலையில் இருப்பதை கண்ட உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர்.

அடுத்தடுத்த புயலால் சபிக்கப்பட்ட தொழிலாளர்கள்!

இதைத்தொடர்ந்து கடல்நீர் வடிந்தப் பிறகு மீண்டும் உப்பு உற்பத்தி செய்வதற்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்டபோது அடுத்தடுத்த புயலின் தாக்குதலால் உப்பளங்கள் சேதம் அடைந்தன. அதை அடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததாலும் உப்பு உற்பத்தி செய்ய வாய்ப்பில்லாமல் போனது. இப்படி இயற்கை சீற்றங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழிலை தேடிசெல்லும் நிலை வந்தது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது நலிவடைந்து போனது உப்பளத்தொழிலாளர்களுக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

உப்புத் தொழில் அழியும் அபாயம்

Intro: நலிவுற்ற நிலையில் உப்பு உற்பத்தி தொழில்


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கடற்பகுதி யான தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி தொழில் அமோகமாக இருந்து வந்தது. வேதாரண்யத்தில் விளையும் உப்புக்களை போன்று அதிராம்பட்டினத்தில் விளையும் உப்புக்களும் சாப்பாட்டிற்கு உகந்த உப்பு என்பதால் இந்த பகுதியில் உப்பு உற்பத்தி அதிக அளவில் இருந்து வந்தது. இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியின்போது இங்கு விளையும் உப்புக்களை இங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு எடுத்த செல்வதற்காகவே அதிராம்பட்டினத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி இதன் மூலம் இங்கு விளையும் உப்புக்களை மற்ற பகுதிகளுக்கும் இதேபோல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஆங்கிலேயே அரசு முன்வந்து இதற்கென இந்த பகுதியில் கடந்த 1922 ஆம் ஆண்டு அதிராம்பட்டினம் பழஞ் செட்டித் தெரு பகுதியில் உப்புத்துறை அலுவலகம் கட்டப்பட்டு இதற்கென தனி அதிகாரிகளை நியமித்தது. மேலும் உப்பளத் தொழிலாளர்கள் தங்குவதற்கு என குடியிருப்புகள் அமைத்துக் கொடுத்து உப்பளத் தொழிலை லாபகரமான தொழிலாக அப்போதைய ஆங்கில அரசு செய்துவந்தது. அந்த காலகட்டத்தில் அதிராம்பட்டினத்தில்கிட்டத்தட்ட 5000 ஏக்கருக்கு மேல் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த உப்பு உற்பத்தி காகவே கிட்டத்தட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உப்பள தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவ்வளவு தீவிரமாக செயல்பட்டுவந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது பல்வேறு காரணங்களால் அதிராம்பட்டினம் பகுதியில் உப்பு உற்பத்தி தொழில் நலிவடைந்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் புயல் மழை போன்ற இயற்கை இடர்பாடுகள் என்பதுதான். கடந்த ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொண்டால் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு அதாவது பாத்தி கட்டுதல் ,நீர் பாய்ச்சுதல், கால் மிதித்தல் போன்ற ஆரம்பகட்ட உப்பு உற்பத்தி பணிகளை துவங்கிய நிலையில் கஜா புயலின் போது கடல் நீர் வெளியேறி கடலில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியுள்ள உப்பளங்களில் கடல் நீர் புகுந்தது. அந்தச் சூழலில் கடல் எது உப்பளம் எது என்று தெரியாத அளவிற்கு புயலின்போது உடைந்த படகுகள் உப்பளங்களில் மிதந்தன. இந்நிலையில் உப்பு உற்பத்திக்கு என கடுமையாக செலவு செய்துவிட்டு உப்பளங்கள் இந்த நிலையில் இருப்பதை கண்ட உப்பு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கடல் நீர் வடிந்து திரும்ப உப்பு உற்பத்தி தொழில் செய்வதற்காக ஆரம்பகட்ட பணிகளை மேற்கொண்ட பொழுது மீண்டும் அடுத்தடுத்த புயலின் தாக்குதலால் உப்பளங்கள் சேதம் அடைந்தன. அதை அடுத்து இடைவிடாது மழை பெய்து வந்ததால் உப்பு உற்பத்தி செய்ய முடியாமலேயே கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் போய்விட்டன. இப்படிஅடுத்தடுத்த இடையூறுகளால் தற்போது உப்பு உற்பத்தி தொழில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளது.இதனால் உப்பு உற்பத்தி தொழிலில் ஈடுபடும் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாற்று தொழில் தேடி செல்லும்நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த உப்பு உற்பத்தி தொழில் தற்போது நலிவடைந்து உள்ளது என்பது இப்பகுதி மக்கள் அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு உப்பு உற்பத்தி தொழிலை கொண்டுவர வேண்டுமென்றால் புயல் மழை காலங்களில் விவசாயிகளுக்கு எப்படி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறதோ அதேபோன்று உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் மத்திய மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.