ETV Bharat / state

பிரளயம் காத்த விநாயகருக்கு மஹா அபிஷேகம்!

author img

By

Published : Sep 3, 2019, 8:51 AM IST

தஞ்சாவூர்: அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி ஆலயத்தில் உள்ள பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்றது.

அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனாய அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி ஆலயம் உள்ளது. இங்கு தனி சந்நிதி கொண்ட பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று விடிய விடிய தேனபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த தேனபிஷேகத்தில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் இந்த தேனபிஷேக காட்சியை தரிசித்து வைக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தேனபிஷேகத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த விநாயகர் சிலையின் மேல் ஊற்றப்படும் தேன் முழுவதும் சிலையே உறிஞ்சிவிடும் என்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இந்த சிறப்பு நிகழ்வினையொட்டி விநாயகரின் சிறப்பை விளக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனாய அருள்மிகு சாட்சிநாத ஸ்வாமி ஆலயம் உள்ளது. இங்கு தனி சந்நிதி கொண்ட பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று விடிய விடிய தேனபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடந்த தேனபிஷேகத்தில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் இந்த தேனபிஷேக காட்சியை தரிசித்து வைக்கும் பிரார்த்தனைகள் அனைத்தும் அடுத்த ஆண்டு தேனபிஷேகத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம்

வருண பகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த விநாயகர் சிலையின் மேல் ஊற்றப்படும் தேன் முழுவதும் சிலையே உறிஞ்சிவிடும் என்பது இந்த கோவிலின் சிறப்பாகும். இந்த சிறப்பு நிகழ்வினையொட்டி விநாயகரின் சிறப்பை விளக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


Intro:தஞ்சாவூர் செப் 02


கும்பகோணம் அருகே திருப்புபுறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் பிரளயம் காத்த விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்று வருகிறது . விநாயகரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்Body:
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு கரும்படு சொல்லியம்மை உடனாய அருள்மிகு சாட்சி நாத ஸ்வாமி ஆலயம் உள்ளது. இங்கு தனி சந்நதி கொண்ட பிரளயம் காத்த விநாயகருக்கு ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தியன்று தேனபிஷேகம் விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.
இந்த விநாயகர் வருண பகவானால் நத்தான் கூடு, கிளிஞ்சல், கடல் நுரையால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
இங்கு நடைபெறும் தேனபிஷேக காட்சியை தரிசித்து வேண்டிடும் பிரார்த்தனைகள் அடுத்த ஆண்டு தேனபிஷேகத்திற்குள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இத்தகைய சிறப்ப வாய்ந்த ஆலயத்தில் பிரலயம் காத்த விநாயகருக்கு சதுர்த்தி விழாவையொட்டி பக்தர்கள் வேண்டி வழங்கிய தேனால் அபிஷேகம் விடிய விடிய நடைபெற்றது.
விநாயகரின் சிரசில் ஊற்றப்படும் தேன் முழுவதும் விநாயகரின் உடல் உறிஞ்சிவிடும் என்பது கூடுதல் சிறப்பாகும்.
தொடர்ந்து விநாயகரின் சிறப்பை விளக்கும் பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


பேட்டி- ராஜசேகர குருக்கள்- திருப்புறம்பயம் ஆலயம்
Conclusion:Tabjire sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.