கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், திருவையாறு பேரூராட்சி பகுதியில் இதுவரை யாருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை என்பதையும், இனிவரும் நாள்களில் எந்த ஒரு நபருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊடகத் துறை, பேரூராட்சி துறை ஆகியவை இணைந்து முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
இந்நிகழ்வில், வட்டாட்சியர் இளமாருதி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாமிநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், மருத்துத்துறை பணியாளர்கள், திருவையாறு பாரதி பவுன்டேஷன் நிர்வாகி, ஊடகத் துறையினர், பேரூராட்சி பணியாளார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:கரோனா ஆபத்தும்... புலம்பெயர்ந்த சிரியர்களும்...