ETV Bharat / state

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதி மறுப்பு: மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 19, 2019, 3:45 AM IST

தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி மறுக்கப்பட்டதால் பொதுப்பணித்துறை அலுவலம் முன்பு மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

cow carriages protesting

தஞ்சாவூர் மாவட்டம் வருவாய் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் வாழ்வதாரத்திற்காக சுமார் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு தடைவிதித்தது. இதனால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு மாடுகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் வந்தனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவாய்த்துறையினர் மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்களின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதனடிப்படையில், முதற்கட்டமாக 280 தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமை வழங்குவதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு பொதுப்பணித்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆர்பாட்டம் நடத்தும் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

இன்று முதல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் மணல் அள்ள அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென பணியிட மாறுதல் பெற்றதால் புதிய ஆட்சியராக கோவிந்தராவ் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, புதிய ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் தான் மணல் அள்ள அனுமதிக்க முடியும் என தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், சிஐடியு அமைப்பினருடன் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஆற்றில் மணல் அள்ள வந்த அலுவலர்கள் - சிறைப்பிடித்த பொதுமக்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் வருவாய் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் வாழ்வதாரத்திற்காக சுமார் 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி வந்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அரசு தடைவிதித்தது. இதனால் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு மாடுகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு தீர்வு காணும் வகையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் அரசு அலுவலர்களிடம் மனுக்கள் அளித்தும் வந்தனர்.

இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவாய்த்துறையினர் மூலம் மாட்டு வண்டி தொழிலாளர்களின் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதனடிப்படையில், முதற்கட்டமாக 280 தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமை வழங்குவதற்கான பட்டியல் இறுதி செய்யப்பட்டு பொதுப்பணித்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆர்பாட்டம் நடத்தும் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

இன்று முதல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கொள்ளிடம் மணல் அள்ள அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை திடீரென பணியிட மாறுதல் பெற்றதால் புதிய ஆட்சியராக கோவிந்தராவ் பொறுப்பேற்றுள்ளார்.

இதையடுத்து, புதிய ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் தான் மணல் அள்ள அனுமதிக்க முடியும் என தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள், சிஐடியு அமைப்பினருடன் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:

ஆற்றில் மணல் அள்ள வந்த அலுவலர்கள் - சிறைப்பிடித்த பொதுமக்கள்!

Intro:தஞ்சாவூர் நவ 18Body: கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் ஆற்று மணல் எடுக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் 750க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதால் உடனே ஆற்றில் மணல் எடுக்க அனுமதி அளிக்க வேண்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை மாட்டுவண்டி தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.


கும்பகோணத்தில் வருவாய் கோட்டத்தில் உள்ள கும்பகோணம், பாபநாசம் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய மூன்று வட்டங்களில் ஆற்று மணல் எடுக்கும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சுமார் 750க்கும் மேற்பட்டோர் தங்களது வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் கடந்த சில ஆண்டுகளாக மாட்டு வண்டியில் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளதால் இவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேலையின்றியுள்ளதால் மாடுகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் அவதியுற்று வருகின்றனர் இதற்கு தீர்வு காண வேண்டி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்ததன் விளைவாக, கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில், மாட்டு வண்டி தொழிலாளர்கள் உண்மை தன்மை ஆய்வு செய்யப்பட்ட பின்னர் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது இதன் அடிப்படையில் தொழிலாளர்கள் அளித்த மனுக்களின் அடிப்படையில், வருவாய்த்துறையினரின் ஆய்வின் மூலம் சரிபார்க்கப்பட்டு, முதற்கட்டமாக 280 தொழிலாளர்களுக்கு மணல் அள்ளும் உரிமை வழங்குவதற்காண பட்டியல் இறுதி செய்யப்பட்டு பொதுப்பணித்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டது இன்று முதல் இவர்கள் கொள்ளிடம் மணல் அள்ள அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவாதமும் தரப்பட்டது ஆனால், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பணியிட மாறுதல் பெற்று இன்று புதிய ஆட்சியராக கோவிந்தராவ் பொறுப்பேற்று கொண்டுள்ள நிலையில் புதிய ஆட்சியரின் அனுமதி பெற்ற பின்னர் தான் அனுமதிக்க முடியும் என மறுத்து தடுத்து நிறுத்தியதால், ஆத்திரமுற்ற மாட்டு வண்டி தொழிலாளர்கள் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.