தென்காசி மாவட்டம், புளியரையில் இருந்து செங்கோட்டை சென்ற அரசுப் பேருந்தில் படியில் தொங்கிச்சென்ற 2 மாணவர்கள் கீழே விழுந்தனர். பேருந்தின் உள்ளே இடமிருந்தும் மாணவர்கள் தொங்கியபடி சென்றதால் மாணவர்கள் கீழே விழுந்துள்ளனர்.
இதனையடுத்து பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் சாலையில் விழுந்த காட்சிகளை பின்னால் வந்தவர்கள் படம்பிடித்துள்ளனர். படியிலிருந்து கீழே விழுந்த 2 மாணவர்களை பேருந்துக்கு பின்னால் வந்தவர்கள் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க: மங்களூரு மீன் தொழிற்சாலையில் விஷ வாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு