ETV Bharat / state

ரூ. 12 கோடி கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு வென்ற லாட்டரி வியாபாரி! - tenkasi district news

தென்காசி: கேரள லாட்டரியின் கிறிஸ்துமஸ் பம்பர் பரிசு ரூ. 12 கோடி பணம் செங்கோட்டையைச் சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு கிடைத்துள்ளது.

பரிசு வென்ற லாட்டரி வியாபாரி
பரிசு வென்ற லாட்டரி வியாபாரி
author img

By

Published : Jan 20, 2021, 7:14 AM IST

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த இரவியதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல் காதர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான சர்புதீன் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சபினா என்பவருக்கும் திருமணமாகி பர்வேஷ் முஷரப் (15) என்ற மகன் உள்ளார். இவர், கடந்த 17ஆம் தேதி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்துவிட்டு, அருகிலுள்ள மற்றொரு லாட்டரி கடையில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை ரூ. 300 பணம் கொடுத்து வாங்கினார்.

அவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி பணம் விழுந்துள்ளது. தற்போது சர்புதீன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை கடையில் கொடுத்துவிட்டு பணம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

தென்காசி மாவட்டம், செங்கோட்டை அடுத்த இரவியதர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி அப்துல் காதர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகனான சர்புதீன் கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் லாட்டரி சீட்டு வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் கேரள மாநிலம் அடூர் பகுதியைச் சேர்ந்த சபினா என்பவருக்கும் திருமணமாகி பர்வேஷ் முஷரப் (15) என்ற மகன் உள்ளார். இவர், கடந்த 17ஆம் தேதி லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்துவிட்டு, அருகிலுள்ள மற்றொரு லாட்டரி கடையில் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியை ரூ. 300 பணம் கொடுத்து வாங்கினார்.

அவர் வாங்கிய லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.12 கோடி பணம் விழுந்துள்ளது. தற்போது சர்புதீன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை கடையில் கொடுத்துவிட்டு பணம் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதையும் படிங்க: லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.