ETV Bharat / state

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தை எரிப்பு: தாய்- தந்தை கைது! - தாய், தந்தை கைது

தென்காசி: சங்கரன்கோவில் அருகே திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தை எரித்து கொல்லப்பட்ட வழக்கில், தாய், தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தை எரிப்பு: தாய், தந்தை கைது!
திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தை எரிப்பு: தாய், தந்தை கைது!
author img

By

Published : Sep 10, 2020, 11:03 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று (செப். 9) அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து நான்கு நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்தது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும் கண்டியபேரியைச் சேர்ந்த சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தின் காரணமாக இருவருக்கும் நெருக்கமடைந்துள்ளனர். இதனால் கோமதி கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருமணமாகத நிலையில் குழந்தை பிறந்ததன் காரணமாக சங்கரின் தூண்டுதலின் பேரில் பெற்ற தாயே கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கோமதியை கைது செய்த காவல் துறையினர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சங்கரை தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை, நகர காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று (செப். 9) அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து நான்கு நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று சடலமாக கிடந்தது. இதனையடுத்து இது குறித்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும் கண்டியபேரியைச் சேர்ந்த சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தின் காரணமாக இருவருக்கும் நெருக்கமடைந்துள்ளனர். இதனால் கோமதி கர்ப்பமானதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து திருமணமாகத நிலையில் குழந்தை பிறந்ததன் காரணமாக சங்கரின் தூண்டுதலின் பேரில் பெற்ற தாயே கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கோமதியை கைது செய்த காவல் துறையினர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சங்கரை தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை, நகர காவல் துறையினர் கைது செய்து மேற்கொண்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க...போதைப்பொருள் வர்த்தகத்தின் சந்தையான கன்னட சினிமா உலகம் - அதிர்ச்சி தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.