ETV Bharat / state

காளையார்கோவில் அருகே மண் குவாரிக்கு எதிராக விவசாயிகள் மனு - மண் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு

சிவகங்கை: காளையார்கோவில் அருகே விவசாய நிலத்தில் மண் குவாரி அமைக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்யக்கோரி ஒய்யவந்தான் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

petition
author img

By

Published : May 13, 2019, 5:50 PM IST

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஒய்யவந்தான் பேச்சாத்தக்குடியில், சுமார் 2,500ன் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் அளவிலான நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு, கால்வாய் போன்றவையே நீர் ஆதாரமாக உள்ளன.

முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்துள்ள இப்பகுதியில் மண் குவாரி அமைப்பதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரத்துக்கால்வாயை தூர்த்து, குவாரிக்கு பாதை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் கூறியும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.

மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள்

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற ஒய்யவந்தான் கிராம மக்கள், குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், இரண்டு நாட்களில் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டைகளை அளித்துவிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஒய்யவந்தான் பேச்சாத்தக்குடியில், சுமார் 2,500ன் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 110 ஏக்கர் அளவிலான நிலத்தில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறு, கால்வாய் போன்றவையே நீர் ஆதாரமாக உள்ளன.

முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்துள்ள இப்பகுதியில் மண் குவாரி அமைப்பதற்கு சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வரத்துக்கால்வாயை தூர்த்து, குவாரிக்கு பாதை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் கூறியும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.

மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள்

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்ற ஒய்யவந்தான் கிராம மக்கள், குவாரி அமைப்பதற்காக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த கிராம மக்கள், இரண்டு நாட்களில் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனில், ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டைகளை அளித்துவிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர்.

சிவகங்கை   ஆனந்த்
மே.13

மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே விவசாய நிலத்தில் மண்குவாரி அமைக்க கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்யக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் ஒய்யவந்தான் பேச்சாத்தக்குடியில் சுமார் 2500 மக்கள் வசித்து வருகின்றனர். முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்துள்ள இப்பகுதியில் மண்குவாரி அமைக்கப்படுகிறது.

ஒய்யவந்தான் பகுதியில் சுமார் 110 ஏக்கர் பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது. மேலும் கிணறுகள் அமைக்கப்பட்டும் கால்வாய் அமைக்கப்பட்டும் உள்ளன. இவையை இப்பகுதிக்கு நீர்ஆதாரம். ஆனால் வரத்துக்கால்வாயை தூர்த்து குவாரிக்கு பாதை அமைக்கப்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் ஏற்கனவே இதுகுறித்து முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறிய கிராம மக்கள் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மேலும் இரண்டு நாட்களில் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படவில்லை எனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊர் மக்கள் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் சுற்றியுள்ள பட்டா இடங்களில் எந்தவித அனுமதியும் இன்றி குவாரிக்கு பாதை அமைப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.