ETV Bharat / state

டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்: கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி

author img

By

Published : May 20, 2019, 8:09 AM IST

சிவகங்கை: டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் கடை

இன்று மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி, திருப்பரங்குன்றத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியதில் தள்ளு முள்ளு

இதனால் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் சிவகங்கை டாஸ்மாக் கடையில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடை ஊழியர்களால் கட்டுக் கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

எனவே, டாஸ்மாக் ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கூட்டத்தினைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனையடுத்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடினர்.

காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனையொட்டி, திருப்பரங்குன்றத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.

டாஸ்மாக் கடையில் கூட்டம் அலைமோதியதில் தள்ளு முள்ளு

இதனால் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் சிவகங்கை டாஸ்மாக் கடையில் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் டாஸ்மாக் கடை ஊழியர்களால் கட்டுக் கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.

எனவே, டாஸ்மாக் ஊழியர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கூட்டத்தினைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். இதனையடுத்து, டாஸ்மாக் ஊழியர்கள் கடையை மூடினர்.

காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை   ஆனந்த்
மே.19

டாஸ்மாக் கடையில் தள்ளுமுள்ளு : மதுபானக் கடை மூடல்

சிவகங்கை: மதுரையில் இடைத்தேர்தல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் சிவகங்கை எல்லையில் உள்ள கடையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் டாஸ்மாக் கடை மூடப்பட்டது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் நடைபெற்று வரும் இடைத்தேர்தலையொட்டி, மதுரை மாவட்டம் முழுவதும் இன்று மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டது.

இதனால் சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள புலியூர் மதுபானக் கடையில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடிமகன்கள் மது வாங்க குவிந்ததால் கூட்டத்தினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தினர். மேலும் பிரச்சனை எழுந்ததையொட்டி மதுபானக் கடை மூடப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.