ETV Bharat / state

சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் பலி!

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே பள்ளிக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியர் மீது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

சாலை விபத்தில்-பள்ளி ஆசிரியர் பலி!
author img

By

Published : Jul 30, 2019, 5:38 AM IST

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரிட்டோ.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பு தொடங்கப்பட்டதால், மாற்று பணியாக எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று வழக்கம் போல் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சிங்கம்புணரி அருகே எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து புழுதிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ஜான் பிரிட்டோ.

இந்நிலையில், அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பு தொடங்கப்பட்டதால், மாற்று பணியாக எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

நேற்று வழக்கம் போல் கணபதிபட்டி அரசுப்பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை சிங்கம்புணரி அருகே எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து புழுதிபட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஜூலை.29

சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் பலி!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே பிரான்பட்டிவிலக்கில் பள்ளிக்கு சென்ற ஆசிரியர் ஜான் பிரிட்டோ என்பவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Body:
ஜான் பிரிட்டோ இடைநிலை ஆசிரியராக கல்லல் ஒன்றியத்தில் பணியாற்றி வந்தார். அரசு பள்ளிகளில் அங்கன்வாடி வகுப்பு தொடங்கப்பட்டதால் மாற்று பணியாக எஸ்.புதூர் ஒன்றியம் கணபதிபட்டி பள்ளிக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மாற்று பணி என்பது பணியாற்றும் ஒன்றியத்திலேயே 8 கி.மீட்டருக்குள் பணியமர்த்த வேண்டும் என்ற விதி இருந்தும் 70 கி.மீ. அப்பால் பணியிட மாற்றம் செய்ததில் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம்போல் பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் வரும்பொழுது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பிரான்பட்டி விலக்கு அருகே எதிரே வந்த கார் பலமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். Conclusion:விபத்து குறித்து புழுதிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.