சிவகங்கை: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று (ஜூன் 11) 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனை கண்டிக்கும் விதமாகவும், விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை நேற்று (ஜூன் 11) அறிவித்தது.
ப.சிதம்பரம் தலைமை
இதனால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஒன்றிய அரசின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிட்ம் பேசிய மாங்குடி, 'ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு குறைக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: காங்கிரஸ் போராட்டம்