சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி(30). இவர் மல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று கந்தசாமி பள்ளிக்குச் சென்றபோது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அவரை துரத்தியது.
இதனால் பயந்துபோன அவர் அருகில் இருந்த 30 அடி கிணற்றில் விழுந்தார்.
நீச்சல் தெரியாததால் கிணற்றின் உள்ளிருந்து சத்தம் போட்டுள்ளார். ஆனால் யாரும் வராததால் கந்தசாமி கிணற்றில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் கிணற்றில் இருந்த உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த இளைஞரின் தலையை வெட்டிய பெண் வீட்டாரின் கொடூரச் செயல்!