ETV Bharat / state

ஆதரவற்றோருடன் தித்திக்கும் தீபாவளியைக் கொண்டாடிய இளைஞர்கள்! - சேலம் அனாதைகளுடன் தீபாவளி கொண்டாடுகிறது

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி ஆதரவற்றோருடன் தித்திக்கும் தீபாவளியை கொண்டாடிய இளைஞர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

cleanse the orphans
author img

By

Published : Oct 27, 2019, 11:48 PM IST

Updated : Oct 28, 2019, 8:00 AM IST

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் தீபாவளிப் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் நேற்று நள்ளிரவு முதலே உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கவனிப்பார் யாருமின்றி இருந்த ஆதரவற்றோருடன் சேலம் இளைஞர் குழுவினர் தீபாவளியை கொண்டாடியது பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சேலத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் சேலம் இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையோரங்களில் ஆதரவற்று இருந்தவர்களுக்கு முடிதிருத்தம் செய்து குளிக்கவைத்தனர். அதையடுத்து, அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், மூன்று வேளை உணவுகளை வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

ஆதரவற்றவர்களை தூய்மைபடுத்தும் இளைஞர்கள்

இதனைத்தொடர்ந்து, சேலம் இளைஞர்களின் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பொது சேவையில் ஈடுபட்டால் தமிழ்நாடு ஆதரவற்றவர்களே இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சுஜித்தை மீட்கும் வரை தீபாவளி இல்லை’ - சொந்த கிராம மக்கள் உருக்கம்!

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிலும் தீபாவளிப் பண்டிகை களை கட்டியுள்ள நிலையில், பொதுமக்கள் நேற்று நள்ளிரவு முதலே உறவினர்கள், நண்பர்களுடன் வாழ்த்துகளைப் பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், சேலத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், கோவில் வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கவனிப்பார் யாருமின்றி இருந்த ஆதரவற்றோருடன் சேலம் இளைஞர் குழுவினர் தீபாவளியை கொண்டாடியது பொதுமக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சேலத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் சேலம் இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சாலையோரங்களில் ஆதரவற்று இருந்தவர்களுக்கு முடிதிருத்தம் செய்து குளிக்கவைத்தனர். அதையடுத்து, அவர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள், மூன்று வேளை உணவுகளை வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

ஆதரவற்றவர்களை தூய்மைபடுத்தும் இளைஞர்கள்

இதனைத்தொடர்ந்து, சேலம் இளைஞர்களின் இந்த சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இதுபோன்ற பொது சேவையில் ஈடுபட்டால் தமிழ்நாடு ஆதரவற்றவர்களே இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘சுஜித்தை மீட்கும் வரை தீபாவளி இல்லை’ - சொந்த கிராம மக்கள் உருக்கம்!

Intro:சேலத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து செடிகளை வைத்து தீபாவளியைக் கொண்டாடினர். குழந்தை நட்சத்திரம் கவின் பூபதி தலைமையில் மரக்கன்றுகளை நட்டு மகிழ்ந்தனர்.


Body:சேலத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்காமல் மரக்கன்றுகளை நட்டு தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சேலம் சூரமங்கலம் அருகில் உள்ளது கருப்பூர். இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நிலம் 5 சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் தீபாவளி தினமான இன்று பட்டாசு வெடிக்காமல் மரக்கன்றுகளை நட்டு தீபாவளியை இன்று காலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

இருபதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள், ஆன் தேவதை திரைப்படத்தின் குழந்தை நட்சத்திரமான கவின் பூபதியுடன் இணைந்து வெள்ளைக்கரு மற்றும் இதை ஒட்டியுள்ள பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்றுகள் நட்டு பின்னர் மண் கொட்டி மூடப்பட்டது. இதன்பிறகு செடிகளுக்கு சிறுவர்கள் தண்ணீரை ஊற்றினார்.

பிறகு சிறுவர்கள் மரக்கன்றுகளை நட்டது குறித்து கூறியதாவது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசடைகிறது. இதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போல பறவைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதை தவிர்த்து செடியை நட்டு வைத்தோம். எங்களது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Conclusion:
Last Updated : Oct 28, 2019, 8:00 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.