ETV Bharat / state

பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படும் அவலம்! - சேலத்தில் மனிதக் கடத்தல் தடுப்பு பயிலரங்கம்! - சேலத்தில் மனித கடத்தல் தடுப்பு தொடர்பான பயிற்சி

சேலம்: அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற மனிதக் கடத்தல் தடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் சேலத்தில் நேற்று நடைபெற்றது.

சேலம்
author img

By

Published : Aug 23, 2019, 6:06 AM IST

Updated : Aug 23, 2019, 8:50 AM IST

சேலம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை, தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனிதக் கடத்தலைத் தடுக்க பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில், சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.வி. சக்திவேல், வழக்கறிஞர் கந்தசாமி பிரபு, காவல் உதவி ஆணையர் நமசிவாயம், சமூகநலத் துறை அலுவலர் கிருத்திகா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மனிதக் கடத்தல் தடுப்பு தொடர்பான பயிற்சி

இந்நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், "மனிதக் கடத்தல் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் நுணுக்கமாக நடைபெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார்கள். அதேபோல் பெண் குழந்தைகளை கடத்துவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கடத்தல்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு கடத்திச் செல்லப்படும் பெண்கள், கொத்தடிமைகளாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகிற அவலம் இருக்கிறது. எனவே, மனிதக் கடத்தல் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

சேலம் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, நீதித் துறை, தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனிதக் கடத்தலைத் தடுக்க பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதில், சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே.வி. சக்திவேல், வழக்கறிஞர் கந்தசாமி பிரபு, காவல் உதவி ஆணையர் நமசிவாயம், சமூகநலத் துறை அலுவலர் கிருத்திகா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மனிதக் கடத்தல் தடுப்பு தொடர்பான பயிற்சி

இந்நிகழ்ச்சியில் பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், "மனிதக் கடத்தல் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் நுணுக்கமாக நடைபெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார்கள். அதேபோல் பெண் குழந்தைகளை கடத்துவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இதுபோன்ற கடத்தல்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. அவ்வாறு கடத்திச் செல்லப்படும் பெண்கள், கொத்தடிமைகளாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகிற அவலம் இருக்கிறது. எனவே, மனிதக் கடத்தல் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோர் விழிப்புடன் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Intro:சேலத்தில், அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் பங்கேற்ற மனித கடத்தல் தடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது.

( மனித கடத்தலை தடுக்க குழு : சேலத்தில் தொடக்கம்)








Body:சேலம் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் ஒருங்கிணைந்து மனித கடத்தலைத் தடுக்க இந்தப் பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.

பயிலரங்கில் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். குமரகுரு , காவல்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மனித கடத்தல் தடுப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பேசுகையில்," மனித கடத்தல் என்பது கண்ணுக்குத் தெரியாத வகையில் நுணுக்கமாக நடைபெறுகிறது.

குறிப்பாக வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி தொழிலாளர்களை அடிமையாக நடத்துகிறார்கள் . அதேபோல பெண்கள் குழந்தைகளை கடத்துவது அதிகரித்து இருக்கிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா , மேற்கு வங்கம் மாநிலங்களில் இதுபோன்ற கடத்தல்கள் அதிகம் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. நேபாள நாட்டிலிருந்தும் நிறைய பெண்கள் ,குழந்தைகள் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.

கடத்திச் செல்லப்படும் பெண்கள், கொத்தடிமைகளாக, பாலியல் தொழிலாளிகளாக மாற்றப்படுகிற அவலம் இருக்கிறது.

எனவே மனித கடத்தல் தொடர்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோர் விழிப்புடன் இருக்கவேண்டும். பெண்குழந்தைகளுக்கு இதுதொடர்பாக முன்னெச்சரிக்கை அறிவுரைகளை பெற்றோர் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.


Conclusion:இந்த பயிலரங்கில் 'ஒன் ஸ்டாப் கிரைசிஸ் டீம்' என்ற அரசுத்துறை தன்னார்வ நிறுவனங்கள் இணைந்து மனித கடத்தல் தடுப்பு குழு தொடங்கப்பட்டது.

நிகழ்வில் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் கே வி சக்திவேல், வழக்குரைஞர் கந்தசாமி பிரபு, காவல் உதவி ஆணையர் நமசிவாயம் , சமூகநலத்துறை அலுவலர் கிருத்திகா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, ஐ ஜே எம் தன்னார்வலர் சாராள் சாந்தினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Last Updated : Aug 23, 2019, 8:50 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.