ETV Bharat / state

ஆகஸ்ட் 12 தொடங்குகிறது மதுரையில் உணவு பொருட்காட்சி - மதுரை உணவு பொருட்காட்சி

சேலம்: மதுரையில் நடக்கவிருக்கும் உணவு பொருட்காட்சியில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் வர்த்தகர்கள், 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொள்ளப்போவதாக வைப்ரண்ட் தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன்
author img

By

Published : May 17, 2019, 10:06 AM IST

மதுரையில் மாபெரும் உணவுப்பொருள் தொழில் வர்த்தக பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் சேலத்தில் அளித்த பேட்டியில்,"

இந்தத் தொழில் வர்த்தக பொருட்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்களும் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்களும் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் வேளாண் உற்பத்தியாளர்கள் உணவு பதனிடும் தொழில் வணிகம் செய்பவர்களும் தங்கள் பொருட்களை பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பாக இந்த பொருட்காட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் சேலத்தில் பேட்டி அளித்தார்

மதுரையில் மாபெரும் உணவுப்பொருள் தொழில் வர்த்தக பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் சேலத்தில் அளித்த பேட்டியில்,"

இந்தத் தொழில் வர்த்தக பொருட்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்களும் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்களும் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் வேளாண் உற்பத்தியாளர்கள் உணவு பதனிடும் தொழில் வணிகம் செய்பவர்களும் தங்கள் பொருட்களை பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பாக இந்த பொருட்காட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

இது குறித்து தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் சேலத்தில் பேட்டி அளித்தார்
Intro:மதுரையில் மாபெரும் உணவுப்பொருள் தொழில் வர்த்தக பொருட்காட்சி வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளதாக, வைப்ரண்ட் தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வணிகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Body:மதுரை உணவுப்பொருள் தொழில் வர்த்தக பொருட்காட்சி குறித்து சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைப்ரண்ட் தமிழ்நாடு பொருட்காட்சி அமைப்பின் தலைவர் திருப்பதி ராஜன் கூறுகையில்," தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அறக்கட்டளை சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு வணிகர்களை இணைக்கும் வகையில், இரண்டாவது ஆண்டாக மதுரை மாநகரில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை உணவுப் பொருள்களின் தொழில் வர்த்தக பொருட்காட்சி நடத்தப்படுகிறது .

இந்த தொழில் வர்த்தக பொருட்காட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வர்த்தகர்களும் 20க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இறக்குமதியாளர்களும் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும் 250 உணவுப்பொருள் உற்பத்தியாளர்கள், தொழில்முனைவோர்கள் பங்கேற்று தங்களின் உணவுப்பொருள் மற்றும் விவசாய விளைபொருட்களை காட்சிக்கு வைக்க உள்ளனர் .

மேலும் வேளாண் உற்பத்தியாளர்கள் உணவு பதனிடும் தொழில் வணிகம் செய்பவர்களும் தங்கள் பொருட்களை பிற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய நல்ல வாய்ப்பாக இந்த பொருட்காட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக உணவு உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.


Conclusion:இந்த விளக்க நிகழ்ச்சியில், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, கோயமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொழில்முனைவோர் கலந்து கொண்டனர் . அவர்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் வாய்ப்புகள் குறித்து மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகள் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.