ETV Bharat / state

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கர்ப்பிணி: உறவினர்கள் போராட்டம் - சேலம் மாவட்ட செய்திகள்

சேலம்: சேலம் தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தருமபுரியைச் சேர்ந்த கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்து உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

vck protest against salem poly clinic hospital management
author img

By

Published : Sep 13, 2019, 8:38 AM IST

சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில், தருமபுரி மாவட்டம் லலிகம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி வெங்கட்டம்மாள் பிரசவத்திற்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மகப்பேறு பிரிவில் அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில், வெங்கட்டம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று மாலை பாலிகிளினிக் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கர்ப்பிணி

மருத்துவர்களின் தவறான சிகிச்சைக்கு கண்டனம் தெரிவித்தும் வெங்கட்டம்மாள் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் உறவினர்களுடன் சேர்ந்து, சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனையின் முன்பு பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாலை ராம். சக்திவேல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

சேலம் நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனையில், தருமபுரி மாவட்டம் லலிகம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி வெங்கட்டம்மாள் பிரசவத்திற்காக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மகப்பேறு பிரிவில் அவருக்கு நேற்று காலை அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பிறந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையில், வெங்கட்டம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் நேற்று மாலை பாலிகிளினிக் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கர்ப்பிணி

மருத்துவர்களின் தவறான சிகிச்சைக்கு கண்டனம் தெரிவித்தும் வெங்கட்டம்மாள் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும் உறவினர்களுடன் சேர்ந்து, சேலம் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவமனையின் முன்பு பாதுகாப்பிற்காக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாலை ராம். சக்திவேல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Intro:சேலம் பாலி கிளினிக் மருத்துவமனையில் மருத்துவர்கள் செய்த தவறான சிகிச்சையால் தர்மபுரி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் திடீர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.


Body:சேலம் 4 ரோடு பகுதியில் சேலம் பாலி கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் தர்மபுரி மாவட்டம் லலிகம் பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி வெங்கட்டம்மாள் நிறைமாத கர்ப்பிணியாக மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மகப்பேறு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வெங்கட் அம்மாளுக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.

அதில் , வெங்கட்டம்மாள் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இன்று மாலை பாலிகிளினிக் மருத்துவமனை வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு மருத்துவர்களின் தவறான சிகிச்சைக்கு கண்டனம் தெரிவித்தும் வெங்கட்ட ம்மாள் குடும்பத்தாருக்கு இழப்பீடு கேட்டு போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து காவல்துறையினர் பாதுகாப்புக்காக மருத்துவமனையில் முன்பு குவிக்கப்பட்டனர் .சேலம் பள்ளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சாலை ராம்.சக்தி வேல் நேரில் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய இழப்பீட்டை வெங்கட்டம்மாள் குடும்பத்தினருக்கு பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Conclusion:பிரசவத்தின் போது உயிரிழந்த வெங்கட்ட ம்மாளின் குடும்பத்தினர் , விடுதலை சிறுத்தை கட்சியினர் மருத்துவமனை வளாகத்தில் நஞத்திய போராட்டத்தால் சேலத்தில் பரபரப்பு நிலவியது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.