ETV Bharat / state

திருமாவளவன் மீது வன்னியர் சங்கம் அவதூறு வழக்கு.. பின்னணி என்ன?

author img

By

Published : Jun 13, 2023, 3:57 PM IST

மேல்பாதி கிராம கோயில் சீல் வைப்பு சர்ச்சை தொடர்பாக திருமாவளவன் அவதூறாக பேசியுள்ளார் என வன்னியர் சங்கத்தினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

thirumavalavan
திருமாவளவன்

சேலம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் விழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் காரணமாக இந்து சமய அறநிலையத் அதிகாரிகள் கோயிலுக்கு சீல் வைத்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மேல்பாதி கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் எம்.பி.சி மற்றும் ஒ.பி.சி பிரிவை சேர்ந்த மக்களையும் பொதுமேடையில் வைத்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், அப்பகுதி மக்களிடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் பொதுவெளியில் திருமாவளவன் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவையும் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து, இரு தரப்பு மக்களிடையே மோதலை உருவாக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைத்து சுயலாபம் தேடி வருவதாக திருமாவளவனுக்கு வன்னியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதனிடையே வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் நான்கில் திருமாவளவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதில், அவரவர் குல தெய்வங்களை கோயிலுக்கு சென்று அமைதியான முறையில் வழிபட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் காவல்துறையினர் 24 மணி நேரம் அமைதியாக இருந்தால் கோயில் பிரச்னைக்கு நாங்களே தீர்வு காண்போம் என்று மிரட்டியதையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மு.கார்த்தி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வழக்குரைஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங், கண்ணன், குமார், விஜயராசா ஆகியோர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளனர். பாமக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன், மாணவர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன், வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன், அமைப்பு செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஒரே கலந்தாய்வு என்பது மாணவர்களுக்கு செய்யும் அநியாயம் - சீமான் கண்டனம்

சேலம்: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் திருக்கோயில் விழாவின் போது அப்பகுதியை சேர்ந்த இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின் காரணமாக இந்து சமய அறநிலையத் அதிகாரிகள் கோயிலுக்கு சீல் வைத்தும் காவல்துறை பாதுகாப்பு வழங்கியும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், மேல்பாதி கிராமத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அதில் ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் எம்.பி.சி மற்றும் ஒ.பி.சி பிரிவை சேர்ந்த மக்களையும் பொதுமேடையில் வைத்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும், அப்பகுதி மக்களிடையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் பொதுவெளியில் திருமாவளவன் பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே சமூக நீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலுவையும் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதனையடுத்து, இரு தரப்பு மக்களிடையே மோதலை உருவாக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைத்து சுயலாபம் தேடி வருவதாக திருமாவளவனுக்கு வன்னியர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதனிடையே வன்னியர் சங்க மாநில செயலாளர் மு.கார்த்தி, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் நான்கில் திருமாவளவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் பேசிய வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதில், அவரவர் குல தெய்வங்களை கோயிலுக்கு சென்று அமைதியான முறையில் வழிபட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணித்து அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன் காவல்துறையினர் 24 மணி நேரம் அமைதியாக இருந்தால் கோயில் பிரச்னைக்கு நாங்களே தீர்வு காண்போம் என்று மிரட்டியதையும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்தில் எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் மு.கார்த்தி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் வழக்குரைஞர்கள் ஐயப்பமணி, பகத்சிங், கண்ணன், குமார், விஜயராசா ஆகியோர் இந்த வழக்கினை தொடர்ந்துள்ளனர். பாமக சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் நாராயணன், மாணவர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிவசங்கரன், வடக்கு மாவட்ட தலைவர் சிவராமன், அமைப்பு செயலாளர் செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: ஒரே கலந்தாய்வு என்பது மாணவர்களுக்கு செய்யும் அநியாயம் - சீமான் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.