ETV Bharat / state

தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு! - தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

சேலம்: குட்டையில் நீந்திய வாத்துகளைக் கண்டு விளையாடச் சென்ற இரண்டு வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

baby died
baby died
author img

By

Published : Dec 13, 2019, 1:28 PM IST

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரஞ்சித் அங்குள்ள தண்ணீர் குட்டையில் வாத்துகள் நீந்துவதைக் கண்டு விளையாடச் சென்றுள்ளார். அப்போது வாத்தை பிடிக்க முயன்ற குழந்தை, எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் கதறி அழுதனர். தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தகவலறிந்த கொங்கணாபுரம் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ரஞ்சித் அங்குள்ள தண்ணீர் குட்டையில் வாத்துகள் நீந்துவதைக் கண்டு விளையாடச் சென்றுள்ளார். அப்போது வாத்தை பிடிக்க முயன்ற குழந்தை, எதிர்பாரத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார்.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் காணவில்லை என அவரின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நீரில் மூழ்கி இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து, பெற்றோர் கதறி அழுதனர். தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தகவலறிந்த கொங்கணாபுரம் காவல் துறையினர் அரசு மருத்துவமனைக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க... ஊராட்சித் தலைவர் பதவிக்காக வங்கி மேலாளர் கொலை - ஏழு பேர் சிறையில் அடைப்பு!

Intro:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாணிக்கம்பட்டியில் தண்ணீர் குட்டையில் மூழ்கி இரண்டு வயது சஞ்சித் என்கிற சிறுவன் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Body:


ஜலகண்டாபுரம் அருகே உள்ள மாணிக்கம் பட்டியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் ரஞ்சித் அங்குள்ள தண்ணீர் குட்டை யில் வாத்து இருப்பதை கண்டு விளையாட சென்றுள்ளான்.
அப்போது வாத்தை பிடிக்க முயற்சி செய்த சிறுவன் எதிர் பாரத விதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளான்.


குழந்தையின் பெற்றோர்கள் விளையாடி கொண்டுஇருந்த சிறுவன் காணவில்லை என்று அக்கம் பக்கம் தேடி பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீரில் மூழ்கி கிடப்பதை கண்டவுடன் பதறி அடித்து கொண்டு, சிறுவனை மீட்டு ஜலகண்டாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்..

குழந்தையின் பெற்றோர்கள் மரண செய்தி கேட்டு மருத்துவ மனை வளாகத்தில் கத்தி கதறி அழுதனர்.

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம், அப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Conclusion:
மேலும் தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் அரசு மருத்துவ மனைக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.