ETV Bharat / state

டிராபிக் காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்த நால்வர் கைது!

author img

By

Published : Oct 3, 2019, 1:41 AM IST

சேலம்:  போக்குவரத்து காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Traffic issue four members arrested in salem

சேலம் மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, இன்று சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருவாகனத்தில் வந்துகொண்டிருந்த வசந்தகுமார், அவர் மனைவி சசிகலா, மகன் வசந்த் ஆகியோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.

காவலர்களின் பணிக்கு இடையூறு செய்ததாக 4 பேர் கைது

ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் காவல் துறையினரை சோதனை செய்யவிடாமல் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் அக்குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில், அங்கு வந்த வசந்தகுமாரின் நண்பர் பழனிசாமி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் தன் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இதையடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி வசந்தகுமாரின் குடும்பத்தினரையும், அவரது நண்பர் பழனிசாமியையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி, இன்று சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இருவாகனத்தில் வந்துகொண்டிருந்த வசந்தகுமார், அவர் மனைவி சசிகலா, மகன் வசந்த் ஆகியோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர்.

காவலர்களின் பணிக்கு இடையூறு செய்ததாக 4 பேர் கைது

ஆனால், இருசக்கர வாகனத்தில் வந்த குடும்பத்தினர் காவல் துறையினரை சோதனை செய்யவிடாமல் அவர்களை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும் அக்குடும்பத்தினர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில், அங்கு வந்த வசந்தகுமாரின் நண்பர் பழனிசாமி காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மட்டுமில்லாமல் தன் செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இதையடுத்து காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி வசந்தகுமாரின் குடும்பத்தினரையும், அவரது நண்பர் பழனிசாமியையும் கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனர்.

Intro:சேலத்தில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.Body:
சேலம் மாநகர் முழுவதும் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று சேலம் ராமகிருஷ்ணா சாலை அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த குமார் அவரது மனைவி சசிகலா அவரது மகன் வசந்த் ஆகியோர் ஒரே வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை போலீசார் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது காவல்துறையினரை அவதூராக பேசியதோடு போக்குவரத்துக்கும் காவல்துறையினர் பணி செய்வதற்கும் இடையூறு செய்ததாக புகார் எழுந்தது.

சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு வந்த அவர்களது நண்பர் பழனிசாமி செல்போன் மூலம் படம் எடுப்பதாக கூறி அடாவடியில் ஈடுபட்டார்.Conclusion:
இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இதனிடையே போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் குடும்பத்தினருக்கும் வீடியோ சேலம் பகுதியில் வாட்ஸ் அப்பில் வைரலாகியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.