ETV Bharat / state

40 ஆண்டுகளுக்கு பிறகு கூடைப்பந்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு! - கூடைப்பந்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு

சேலம்: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற தமிழ்நாடு அணியைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Tamilnadu Basket Ball Women's Team won Gold after 40 years in National Level tournament
Tamilnadu Basket Ball Women's Team won Gold after 40 years in National Level tournament
author img

By

Published : Dec 19, 2019, 4:53 PM IST

பள்ளிக் கல்வித் துறை சார்பாக 17 வயதிற்குள்பட்டவர்களுக்கான 65ஆவது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நடைபெற்றது. இம்மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழ்நாடு அணி பங்கேற்றது. அந்த அணியில் சேலம் குகை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் மாணவி சத்விகாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்றது. தேசிய அளவிலான போட்டிகள் முடிந்து இன்றைய தினம் சேலம் திரும்பிய வீராங்கனை சத்விகாவுக்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு சத்விகாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கூடைப்பந்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு

இந்த வெற்றி குறித்து சத்விகா பேசுகையில், "40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்தது பெருமையாக உள்ளது. இறுதிப்போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!

பள்ளிக் கல்வித் துறை சார்பாக 17 வயதிற்குள்பட்டவர்களுக்கான 65ஆவது தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நடைபெற்றது. இம்மாதம் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழ்நாடு அணி பங்கேற்றது. அந்த அணியில் சேலம் குகை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் மாணவி சத்விகாவும் இடம்பெற்றிருந்தார்.

இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி முதலிடம் பிடித்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கம் வென்றது. தேசிய அளவிலான போட்டிகள் முடிந்து இன்றைய தினம் சேலம் திரும்பிய வீராங்கனை சத்விகாவுக்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு சத்விகாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

கூடைப்பந்தில் தங்கம் வென்ற தமிழ்நாடு

இந்த வெற்றி குறித்து சத்விகா பேசுகையில், "40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் தங்கம் வென்ற தமிழ்நாடு அணியில் இடம்பெற்றிருந்தது பெருமையாக உள்ளது. இறுதிப்போட்டியில் சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றிபெற்றோம். இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் சரவணனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: 400ஆவது போட்டியில் களமிறங்கிய கோலி; சோதனையில் முடிந்த சாதனை!

Intro:தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பாராட்டு.


Body:தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பாராட்டு விழா. 65 ஆவது தேசிய பள்ளிக்கல்வித்துறை சார்பாக 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி மகாராஷ்டிரா மாநிலம் சதாராவில் நடைபெற்றது. இம்மாதம் 10ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் தமிழக அணி யின் சார்பில் சேலம் குகை பகுதியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் மாணவி சத்விகாவும் பங்கேற்றார்.

இந்தப் போட்டியில் தமிழக அணி முதலிடம் பிடித்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் வென்றது. போட்டிகள் முடிந்து இன்றைய தினம் சேலம் திரும்பிய வீராங்கனை சத்விகாவுக்கு அப்பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு சத்விகாவும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.