சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு நபர்களையும் தூக்கிலிட வேண்டும். துணை சபாநாயகர் ஜெயராமனின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், அமைச்சர்களை கண்டித்தும் மாணவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மாணவர்கள் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என மாணவர் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
மாணவர்களின் இந்த போராட்டத்தினால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.