ETV Bharat / state

கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

author img

By

Published : Mar 22, 2023, 3:59 PM IST

சேலம் வழியாக பெங்களூரு-வேளாங்கண்ணி இடையே வரும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக சேலம் ரயில்வே அறிவித்துள்ளது.

Special train operation between Bengaluru Velankanni on the occasion of summer vacation
கோடை விடுமுறையை முன்னிட்டு பெங்களூரு வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

சேலம்: கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஆன்மிக நகரமான வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06547) வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை சனிக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 1, 8, 15 ஆகிய தேதிகளில், காலை 7.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராயபுரம், பங்காருபேட்டை வழியாக மதியம் 12.05 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 12.07 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இரவு 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06548 ) வரும் மார்ச் 25 தேதி முதல் ஏப்ரல் 1, 8, 15 வரை சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.40 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் சேலத்தில் இருந்து புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயிலில் ஏ.சி. மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 13 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஏழு பெட்டிகளுடன் இயங்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா - தஞ்சைக்கு கோடை கால சிறப்பு ரயில்! எப்போ தெரியுமா?

சேலம்: கோடைகாலம் தொடங்க உள்ள நிலையில், ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை அவ்வப்போது இயக்கி வருகிறது. இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி வழியாக ஆன்மிக நகரமான வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ''பெங்களூரு-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06547) வரும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை சனிக்கிழமைகளில் பெங்களூருவில் இருந்து மார்ச் 25 மற்றும் ஏப்ரல் 1, 8, 15 ஆகிய தேதிகளில், காலை 7.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கன்டோன்மென்ட், கிருஷ்ணராயபுரம், பங்காருபேட்டை வழியாக மதியம் 12.05 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து 12.07 மணிக்குப் புறப்பட்டு ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இரவு 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - பெங்களூரு வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண் 06548 ) வரும் மார்ச் 25 தேதி முதல் ஏப்ரல் 1, 8, 15 வரை சனிக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 7.40 மணிக்கு சேலம் வந்தடையும்.

பின்னர் சேலத்தில் இருந்து புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த ரயிலில் ஏ.சி. மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 13 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஏழு பெட்டிகளுடன் இயங்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகா - தஞ்சைக்கு கோடை கால சிறப்பு ரயில்! எப்போ தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.