ETV Bharat / state

தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை!

author img

By

Published : Dec 14, 2019, 8:13 AM IST

சேலம்: சிறுநீரகம் செயலிழந்த இளைஞருக்கு அவரது தந்தையின் சிறுநீரகத்தை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.

kidney transplantation, தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை
kidney transplantation, தந்தையின் சிறுநீரகத்தை மகனுக்கு பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை

சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேகர் (32) என்ற இளைஞருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மேலும் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து சேகரின் தந்தை அர்சுனன், தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.

இதைத் தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்படி கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அர்சுனனின் சிறுநீரகம் பெறப்பட்டு அதை அவரது மகன் சேகருக்கு சேலம் அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக மாற்றி பொருத்தினர். இதையடுத்து தற்போது சேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

மகனுக்கு கிட்னியை தானமாக வழங்கிய தந்தை

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்துக் கருவிகளும் மாத்திரை மருந்துகளும் உள்ளதாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேலத்தில் மட்டும் 36 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு தேவை எனவும் மூளைச்சாவு அடையும் நபர்களின் உறவினர்கள் உறுப்பு தானம் அளிக்க முன் வரவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேகர் (32) என்ற இளைஞருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். மேலும் அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து சேகரின் தந்தை அர்சுனன், தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக வழங்க முன்வந்தார்.

இதைத் தொடர்ந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்படி கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அர்சுனனின் சிறுநீரகம் பெறப்பட்டு அதை அவரது மகன் சேகருக்கு சேலம் அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக மாற்றி பொருத்தினர். இதையடுத்து தற்போது சேகரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது.

மகனுக்கு கிட்னியை தானமாக வழங்கிய தந்தை

மேலும், சேலம் அரசு மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்துக் கருவிகளும் மாத்திரை மருந்துகளும் உள்ளதாகவும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேலத்தில் மட்டும் 36 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு தேவை எனவும் மூளைச்சாவு அடையும் நபர்களின் உறவினர்கள் உறுப்பு தானம் அளிக்க முன் வரவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Intro:சேலத்தில் சிறுநீரகம் செயலிழந்த மகனுக்கு தந்தையின் சிறுநீரகத்தை பொருத்தி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் உறுப்புகளை தானமாக வழங்க அனைவரும் முன்வர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Body:சேலம் எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேகர் வயது 23 என்பவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்ததால் மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து சேகரின் தகப்பனார் அர்சுனன் தனது ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு தானமாக வழங்க முன் வந்ததையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்படி கடந்த 27.11.2019 ஆம் தேதி சிறுநீரகத்தை சேலம் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் மாற்றி பொருத்தி சாதனை படைத்துள்ளனர். மேலும் சேலம் அரசு மருத்துவமனையில் மாற்று உறுப்பு சிகிச்சை செய்ய அனைத்து கருவிகளும், மாத்திரை மருந்துகளும் உள்ளதாகவும், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக சேலத்தில் மட்டும் 36 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளதாக மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு தேவை எனவும், மூளைச்சாவு அடையும் நபர்களின் உறவினர்கள் உறுப்பு தானம் அளிக்க முன் வர வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பேட்டி: பெரியசாமி - அரசு பொது மருத்துவமனை மருத்துவர் சேலம்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.