ETV Bharat / state

ரவுடி கொலை வழக்கில் 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

author img

By

Published : Jul 6, 2019, 1:28 PM IST

சேலம்: குமாரபாளையம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 6 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குற்றவாளிகள்

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அருள்ஜோதி. இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் மயானம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆறு பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அருள்ஜோதி. இவர் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் மயானம் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து கிடந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ஆறு பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் 6 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.Body:

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அருள்ஜோதி. இவர் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள கவுண்டனூர் மயானம் அருகில் தலை மற்றும் இடுப்பு பகுதியில் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

இது தொடர்பாக காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருள்ஜோதி அவ்வப்போது லாரி டிரைவர் வேலைக்கு சென்று வந்துள்ளார். மற்ற நேரங்களில் சீட்டாட்டம், சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் ரவுடி போல செயல்பட்டு வந்த அவர் மீது ஏற்கனவே ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சங்ககிரி காவல் நிலையத்தில் உள்ளன.
ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் அவர் மேல் இருப்பதால் முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது சீட்டாட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அருள்ஜோதி கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் இருந்ததால் 3 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை சந்தேகத்தின் பேரில் குமாரபாளையம் காவல்துறையினர் தேடி வந்த நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டையூர் பகுதியை சேர்ந்த கனகராஜ், அண்ணாதுரை, தர்மலிங்கம், தினேஷ்குமார் ,அரவிந்த், முருகேசன் ஆகிய 6 பேர் இன்று சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் நீதிபதி சிவா முன்னிலையில் சரண் அடைந்தனர்.

லாரி ஓட்டுநரான அருள் ஜோதிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக நடந்த மோதலில் கொலை செய்ததாக சரணடைந்த குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.






Conclusion:
இதையடுத்து சரணடைந்தவர்களை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சிவா உத்தரவிட்டார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.