ETV Bharat / state

மகாராஷ்டிர கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சேலம் போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள் - hot chase

சேலம்: தங்க நகைகளை திருடிவிட்டு தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்த மகாராஷ்டிர கொள்ளையர்களை சேலம் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சம்பவம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

போலீஸ்
author img

By

Published : Jul 29, 2019, 3:19 PM IST

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடையில் ஐந்து பேர் கொண்ட வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று 3.5 கிலோ தங்க நகையைத் திருடிவிட்டு தமிழ்நாட்டிற்குத் தப்பித்துச் சென்றது. இது குறித்து கேரள காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் கோவை, சேலம், தருமபுரி மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சேலம் போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்

இதனையடுத்து சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது பத்தினம்திட்டா திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணபதி யாதவ், பிரசாத் யாதவ், தாதாசாகிப் உள்ளிட்ட நான்கு பேர் கையும், களவுமாகப் பிடிபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை நித்தின் யாதவ் என்பவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சேலம் காவல்துறையினர் மாநகரம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில், நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை காவல் ஆணையர் ரங்கதுரை தலைமையிலான கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தின் யாதவை மூன்றரை கிலோ தங்க நகைகளுடன் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கொள்ளை கும்பலை விரைந்து கைது செய்த சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டினார். மேலும், இச்சம்பவம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள நகைக்கடையில் ஐந்து பேர் கொண்ட வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று 3.5 கிலோ தங்க நகையைத் திருடிவிட்டு தமிழ்நாட்டிற்குத் தப்பித்துச் சென்றது. இது குறித்து கேரள காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் கோவை, சேலம், தருமபுரி மாவட்ட காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிர கொள்ளையர்களை மடக்கிப்பிடித்த சேலம் போலீஸாருக்கு குவியும் பாராட்டுகள்

இதனையடுத்து சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின்போது பத்தினம்திட்டா திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கணபதி யாதவ், பிரசாத் யாதவ், தாதாசாகிப் உள்ளிட்ட நான்கு பேர் கையும், களவுமாகப் பிடிபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் கொள்ளையடித்த நகைகளை நித்தின் யாதவ் என்பவர் எடுத்துக்கொண்டு தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் சேலம் காவல்துறையினர் மாநகரம் முழுவதும் நடத்திய தீவிர சோதனையில், நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து துணை காவல் ஆணையர் ரங்கதுரை தலைமையிலான கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நித்தின் யாதவை மூன்றரை கிலோ தங்க நகைகளுடன் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கொள்ளை கும்பலை விரைந்து கைது செய்த சேலம் கொண்டலாம்பட்டி காவல்துறையினரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் பாராட்டினார். மேலும், இச்சம்பவம் அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

Intro:கேரள மாநிலம் பத்தினம்திட்டா நகை கடையில் கொள்ளையடித்து தப்பி சேலம் வந்த 5 மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது


Body:கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் உள்ள நகை கடை ஒன்றில் நேற்று மூன்றரை கிலோ தங்க நகைகள் 5 பேர் கொண்ட கும்பல் திருடி தப்பி சென்றது. இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் பத்தினம்திட்டா காவல் நிலையத்தில் புகார் செய்தார் பின்னர் கேரளா போலீசார் இதுகுறித்து தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் கோவை சேலம் தர்மபுரி மாவட்ட காவலர்கள் நேற்று நள்ளிரவு விடிய விடிய வாகன தணிக்கை செய்தனர் அப்போது சேலம் அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் மகாராஷ்டிரா கொள்ளையர்கள் 4 பேர் வந்தனர் இவர்களை கொண்டலாம்பட்டி காவல்துறையினர் மடக்கி கைது செய்தனர் இவர்களில் ஒருவர் பெயர் கணபதி யாதவ் மற்றும் பிரசாத் யாதவ், ஆதார் கார்ட், தாதாசாகிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் பின்னர் இவர்கள் வந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது இந்த காரில் வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நித்தின் யாதவ் அங்கிருந்து நகையுடன் தப்பி சென்றுவிட்டான்.

இவனை விடிய விடிய மாநகரம் முழுவதும் போலீசார் தேடினர் இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் நித்தின் யாதவ் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் பதுங்கி இருந்ததால் இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சக்திவேல் செல்வம் மற்றும் பொதுமக்கள் சிலர் சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டனர் இவன் கையில் மூன்றரை கிலோ தங்க நகைகள் வைத்திருந்ததால் பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் இதன் பேரில் துணை கமிஷனர் ரங்கதுரை தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் போலீசாரிடம் கொள்ளையன் நித்தியன் ஒப்படைக்கப்பட்டார் முத்தம் இந்த நகை கொள்ளை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.