ETV Bharat / state

பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி 17 சவரன் நகை திருட்டு! - அதிர்ச்சியில் மருத்துவர் குடும்பம்

author img

By

Published : Jan 20, 2020, 7:16 PM IST

Updated : Jan 20, 2020, 7:44 PM IST

சேலம்: பொங்கல் விடுமுறையைப் பயன்படுத்தி பல் மருத்துவர் வீட்டில் 17 சவரன் நகைகளைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

கொள்ளை நடந்த மருத்துவர் வீடு
கொள்ளை நடந்த மருத்துவர் வீடு

அழகாபுரம் பகுதியிலுள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சந்தோஷ்குமார். இவர் அரியானூர் பகுதியில் இருக்கும் விநாயகா மிஷன் மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், மருத்துவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 17 சவரன் நகைகள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

மும்பை சென்ற மருத்துவர் குடும்பம், இன்று வீடு திரும்புகையில், வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது நகைகள், பணம், மடிக்கணினி உள்ளிட்டவைகள் திருடுபோனது தெரியவந்தது.

திருட்டு நடந்த மருத்துவர் வீடு

இது குறித்து, மருத்துவர் சந்தோஷ்குமார் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை

அழகாபுரம் பகுதியிலுள்ள குமரன் நகரைச் சேர்ந்தவர் மருத்துவர் சந்தோஷ்குமார். இவர் அரியானூர் பகுதியில் இருக்கும் விநாயகா மிஷன் மருத்துவமனையில் பல் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு இவர் குடும்பத்துடன் மும்பைக்குச் சென்றிருந்தார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட திருடர்கள், மருத்துவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவிலிருந்த 17 சவரன் நகைகள், 12 ஆயிரம் ரூபாய் ரொக்கம், மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

மும்பை சென்ற மருத்துவர் குடும்பம், இன்று வீடு திரும்புகையில், வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர், வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது நகைகள், பணம், மடிக்கணினி உள்ளிட்டவைகள் திருடுபோனது தெரியவந்தது.

திருட்டு நடந்த மருத்துவர் வீடு

இது குறித்து, மருத்துவர் சந்தோஷ்குமார் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அடையாளம் தெரியாத நபர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: காட்பாடி அருகே ரூ.3 லட்சம் திருட்டு: மருத்துவர் வீட்டில் கைவரிசை

Intro:சேலம் டாக்டர் வீட்டில் 17 சவரன் தங்க நகைகள் கொள்ளை. மும்பை சென்றபோது வீட்டு பூட்டை உடைத்து திருட்டு.Body:
சேலத்தில் பல் மருத்துவர் வீட்டு பூட்டை உடைத்து 17 சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது.

சேலம் மாநகராட்சி அழகாபுரம் பகுதியில் உள்ளது குமரன் நகர்.
இங்கு வசித்து வருபவர் சந்தோஷ்குமார். பல் மருத்துவர். இவர் சேலம் அருகே உள்ள அரியானூர் பகுதியில் இருக்கும் விநாயகா மிஷன் மருத்துவமனையில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பொங்கல் பண்டிகைக்காக சந்தோஷ் குமாரும், அவரது குடும்பத்தினரும் மும்பை சென்றனர்.
இன்று காலை மருத்துவர் சந்தோஷ்குமார் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டுக்குள் திருடர்கள் புகுந்து பீரோவை உடைத்து 17 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லேப்டாப்,
ரொக்கம் 12 ஆயிரத்தை திருடி சென்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இந்த திருட்டு குறித்து அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த கொலையில் துப்பு தொடங்க உதவி கமிஷனர் பூபதி ராஜன் தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.Conclusion:
Last Updated : Jan 20, 2020, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.