ETV Bharat / state

மூன்று குழந்தைகளின் தாய் கழுத்தறுத்து கொலை; தகாத உறவால் விபரீதம்!

சேலம்: மூன்று குழந்தைகளின் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தப்பிச் சென்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொண்டாலம்பட்டி காவல்துறை
author img

By

Published : Jun 29, 2019, 6:30 PM IST

சேலம் மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு மனைவி முனியம்மாள் (45), மூன்று குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாமிநாதன், தினமும் குடித்து விட்டு வந்த தகராறு செய்வது வழக்கம். இதனால் விரக்தியடைந்த முனியம்மாள், கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமண உறவிற்கு மீறிய காதலாக மாறியது.

இதையடுத்து முனியம்மாள் வீட்டில் செந்தில்குமார் நிரந்தரமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வந்த செந்தில்குமார், முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் இருவருக்கும் இரவு முழுவதும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், கத்தியால் முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்

இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாளின் வீட்டு கதவு திறக்காததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் சடலத்தை கைப்பற்றிய கொண்டாலம்பட்டி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து சாமிநாதனை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவருக்கு மனைவி முனியம்மாள் (45), மூன்று குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான சாமிநாதன், தினமும் குடித்து விட்டு வந்த தகராறு செய்வது வழக்கம். இதனால் விரக்தியடைந்த முனியம்மாள், கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமண உறவிற்கு மீறிய காதலாக மாறியது.

இதையடுத்து முனியம்மாள் வீட்டில் செந்தில்குமார் நிரந்தரமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று குடித்துவிட்டு வந்த செந்தில்குமார், முனியம்மாளிடம் தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். ஆனாலும் இருவருக்கும் இரவு முழுவதும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செந்தில்குமார், கத்தியால் முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

விசாரணை மேற்கொள்ளும் காவல்துறையினர்

இன்று காலை நீண்ட நேரமாகியும் முனியம்மாளின் வீட்டு கதவு திறக்காததால், சந்தேகமடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தபோது முனியம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். பின்னர் சடலத்தை கைப்பற்றிய கொண்டாலம்பட்டி காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து சாமிநாதனை தேடி வருகின்றனர்.

Intro:சேலத்தில் 3 குழந்தைகளின் தாயார் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சடலம் ரயில்வே பாதையில் வீசப்பட்டது. சடலத்தை கைப்பற்றிய போலீசார் கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Body:சேலம் அருகே உள்ளது கொண்டலாம்பட்டி இங்குள்ள புதூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 45 வயதான முனியம்மாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

முனியம்மா ளுக்கும் அவரது கணவர் சாமிநாதனுக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த சில வருடங்களாக முனியம்மாள் தனியே வசித்து வந்தார்.

கட்டிட வேலைக்கு சென்று வந்த முனியம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

முனியம்மாளின் குழந்தைகள் முனியம்மாளின் தாயிடம் வசித்து வருகிறார்கள்.

செந்தில் குமாருக்கு குடிப்பழக்கம் உண்டு தினமும் மது குடித்து வீட்டுக்கு வந்து முனியம்மாள் இடம் தகராறு செய்து வந்தார்.

இவர்களை அக்கம் பக்கம் வசிப்பவர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இவர்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது இதில் கோபம் அடைந்த செந்தில்குமார் கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்து கொன்றார்.

இதன் பின்னர் முனியம்மாளின் சடலத்தை நள்ளிரவில் தூக்கிவந்து புத்தூர் அருகே உள்ள ரயில் பாதையில் வீசி விட்டு தப்பி சென்று விட்டார். இன்று காலையில் முனியம்மாளின் சடலத்தை பார்த்த பொதுமக்கள் உடனே இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன்பேரில் கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஈஸ்வரன் ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் சென்று முனியம்மாளின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சடலத்தை சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர.

இந்தக் கொலையில் துப்பு துலங்க ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் செந்தில்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.




Conclusion:இந்த கொலை சம்பவம் கொண்டலாம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.